Wednesday, September 18, 2013

காதல்.! காதல்.!! காதல்.!!!


   
ச்சை…ச்சை…ச்சை…  
இதப்பத்தி எழுதாதவர் யாருமுண்டோ??! சொல்றது கொஞ்சம் கஷ்டம்தான்....
ஆனா இதமட்டுமே எழுதறவங்க??! எத்தன!... 
அந்த மாதிரித்தான் நானும்...ஜிம்முக்குப்போன உடனே ஆர்வக்கோளாறுல இருக்குற எல்லாத்துலயும் வொர்க் அவுட் பன்னீட்டு மறுநாள் காலைல எந்திரிக்க முடியலியேனு கஷ்டப்படுவாங்களே...அந்த மாதிரி நானும் கொஞ்சம் காதலப்பத்தி எழுதிப்புட்டேன்;-) 


சம காலத்துல டுவிட்டருலையும் இருந்ததால கொஞ்சம் வசதியாப்போச்சு...
ட்விட்டரின் சிறப்பே அதான்..சோகம் காணாம போய்டும் சந்தோஷம் பலமடங்கு தானா வந்து சேரும்...
காதல்ல இருக்கறவன்,ஜெயிச்சவன்,தோத்தவன்னு பாரபட்சம் இல்லாம காதல் காதல் காதல்னு தோனுன எல்லாத்தையும் யாரப்பத்தியும் கவலப்படாம கிறுக்கு கிறுக்குன்னு கிறுக்கி மன ஆறுதல் தேடிக்கலாம்..நானும் இந்த ஆயுதத்த யூஸ் பன்ன ஆரம்பிச்சேன்..,தோனுன எல்லாத்தயும் எழுதுனதுல,ஒரு அளவுக்கு வாசிக்கிற மாதிரி இருக்கும்னு நம்ம்ம்பி....அதுல கொஞ்சத்த தேடி எடுத்து இங்க வச்சிருக்கேன்...படித்தின்புற்றிருங்கள்:-)))



  • காதலின் துவக்கம் விழி'ப்புணர்வு...!

  • தனிமையில் எதைப்பற்றி சிந்திக்கிறாயோ அதுதான் நீ என்றார்கள்.தனிமையிலும் உனைப்பற்றியே சிந்தித்தேன்,இப்போது நீதான் நான்..!

  • உன் கனவில் ஒரு முறையேனும் தோன்றிச்சாக ஆசை.

  • என்னருகில் வரும்போது நீ என்னை கண்டுகொள்ளாமல் செல்கையிலேயே கண்டுகொண்டேன் நீ என்னை தொலைவிலேயே கண்டுகொண்டாயென்று…

  • உன்னை எதிர்பார்த்துக் காத்திருந்த நாட்களை விட எதிரே பார்க்கத் தோற்றிருந்த நாட்களே அதிகம்.
  • காதலில் இன்பம் நேர்’காணலில் சொதப்புவதே..!

  • கண்டுகொள்ளாமையும் கண்டு கொல்லாமையும் காதலுக்கு அழகில்லை..!

  • உன் முகத்துக்கு நேர் பார்த்துப்பேசினாலும் மூக்கிற்கு மேல் பார்த்துப்பேசுவதில்லை,பிறகு வாயை மூடிவிட்டு அவர்கள் சண்டையிட்டுக்கொள்வார்கள்.

  • இருவருக்கும் சந்தோஷம் உனக்கும் உன் கள்ளப்பார்வையில் முகம் பதிக்கும் எனக்கும்.

  • உன் பார்வையின் அர்த்தத்திற்கு மட்டும் ஐந்தாறு விவிழியம் எழுதித்தந்து விடு.

  • காரணம் தேடிப் பேசிக்கொண்டிருந்தோம்..காரணமின்றி பேசிக்கொண்டே இருக்கிறோம்..

  • காதலைப்பொறுத்தவரை மூன்று இரகசியங்கள்:
     1.எல்லாவற்றையும் இரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
     2.
     3.

  • உணர்வாகித்திரிகையில் உரைப்பதற்கொன்றுமில்லை...!

  • காதலைத்தவிர எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன்,சொன்ன எல்லாவற்றிலும் கொஞ்சம் காதலை ஒளித்துவைத்தேன்

  • கணங்களை அனுபவிப்பதற்கு காதலிப்பதைத் தவிற வேறுவழி இருப்பதாய்த் தோன்றவில்லை.

  • "உம் மனசுல நீ என்னதான்டா நெனச்சுகிட்டுருக்க?" என்றவளிடம் "அதான் நீயே சொல்லிட்டயே!" என்றேன்

  • பார்த்துக்கொண்டால் பேசலாமென்றிருக்கிறோம்..,பார்த்துக்கொள்வதற்க்குக் காத்துக்கொண்டிருக்கிறோம்…

  • புரையேறிப் போய்விட்டது,அவள் நினைவு தட்டுகிறது.

  • துக்கம் மறப்பதற்க்கும் தூக்கம் தொலைப்பதற்கும் நம் நினைவுகள் போதும்...

  • முதல் காதலி மட்டும் நம்மூடே வாழ்கிறாள்,கைப்பேசிக்கோ ஏதேனுமொரு இணையக்கணக்கிற்கோ கடவுச்சொல்லாக...

  • இர(ற)ப்பதில்லை காதல்…..



மொத்ததுல புதுபதிவு எழுத ஒன்னும் தோனாததால பழசுகள எடுத்து வச்சிருக்கேன். அப்பப்ப வாங்க;-)