Friday, August 23, 2013

ஒரு கவிதை



சென்ற
வார விகடனில் வெளியாகமல் போன எனது கவிதை:-p

அவள்

வண்ண வண்ணப் பூச்சுக்கள்..

தோரணங்கள்..

அலங்காரங்கள்..

இருக்கைகள்..

வழி நெடுக அழைப்பு வார்த்தைகள்

பெயர்ப்பலகைகள்

இயந்திர(ற) மனிதர்கள் !


'வியாபாரமேதான்!' எனச் சொல்லாமல் சொல்லும்

நிர்ணயித்த விலைப்பட்டியலும்,

யாரேனுமொரு திரைப்பிரபலம் கையில் வைத்துப்

பல்லிளிக்கும் விளம்பரச் சுவரொட்டியும்...

இவையெல்லாம் பற்றி ஏதுமறியாமல் அந்த பானக்

கடையிடம் கொஞ்சம் தோற்றுத்தான் போகிறாள்..,


அதன் முன்னேயோ, பக்கவாட்டிலோ

எதிரிலோ, இல்லை ஓடியோடியோ

வெள்ளரிப்பிஞ்சையும் தர்ப்பூசணிக்கீற்றையும்

நோண்டிய நுங்கையும் திராட்சைக்குலையயும்,

விலைஅளவு வரைமுறையின்றி

சிறு உரையாடலுடன் விற்கப்போராடும்

வெற்றிலைக் கிழவி...!