Showing posts with label நிக்கனோர் பார்ரா. Show all posts
Showing posts with label நிக்கனோர் பார்ரா. Show all posts

Saturday, March 24, 2018

கவிதை - நிக்கனோர் பார்ரா (1914 - 2018)


இளம் கவிஞர்களுக்கு

நீங்கள் விரும்புவதுபோல எழுதுங்கள்
எந்தமுறை உங்களுக்குப் பிடிக்குமோ அந்தமுறையில்
ஒற்றை வழிதான் சரி என்று
நம்பிக்கொண்டிருப்பதற்கிடையில்
பாலத்துக்குக் கீழே குருதிப் பெருவெள்ளம் புரண்டோடி ஆயிற்று.
கவிதையில் எல்லாம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது
சந்தேகமில்லை, ஒரு நிபந்தனையும் இருக்கிறது
வெற்றுத் தாளில் நீங்கள் முன்னேற வேண்டும்.

தமிழில்: சுகுமாரன்
காலச்சுவடு, மார்ச் 2018.