Wednesday, September 11, 2019

உம்மைச் சரணடைந்தோம்

அய்யனே... எம் அம்மையே...
அந்த நாள் வந்தே விட்டது
இதற்குத்தானே காத்திருந்தீர்!
புத்தாடை, மலர்ச்சாத்து
சந்தனக்காப்பு, ஊர்க்கூட்டம்
பொங்கப்பானை, குலவைச்சத்தம்
என ஒவ்வொன்றாய்
இனித் தொடரும்.

அதற்கும் முன்,

பகலவனை உசுப்பி இன்றைய தினத்தைத்
துவங்கி வைத்தவனைப் பாரும் 
அவனைக் கொஞ்சம் ஆசிர்வதியும்

ஒவ்வோர் பாடலாய் உரசிப்பார்த்து
இத்தெருவில் ஓடவிடுகிறான் கேளும்
அவனுக்குக் கொஞ்சம் கருணை காட்டும்

இடையிலவன் ஏவிவிடும் சங்கேத சங்கீதங்களை
வளிவழி எல்லோர்க்கும் அனுப்பி வையும் 

பன்னெடுங்காலமாய் வேண்டி நிற்கும் 
அவள் கடைக்கண் ஒளியை
இன்றாவது அவன் மீது பரவச்செய்யும்

எல்லாம் உம் செயல்!