Sunday, June 9, 2013

அ...

அனைவருக்கும்  வணக்கங்கள் :-)

வலைப்பூவினை அறிமுகம் செய்த கீச்சுலக நண்பர்களுக்கு இக்கணத்தில் நன்றிகள்!

சித்திரத்தோடு எழுத்தும் கைப்பழக்கம் என்பது முதல் பதிவினை எழுதுகையிலேயே புரிகின்றது...

என் எழுத்துக்கள் இயல்பை மீறி சிறிது விறைப்பான நடையிலேயே போகலாம்...சில நேரங்களில் என் உளப்பார்வையையும் முட்டாள்தனத்தையும் வெளிக்காட்டலாம்...
எழுதுவது என் உரிமை என்றாலும் சில நேரங்களில் உங்களைப்போன்ற வாசிப்பாளர்களை திருப்திப்படுத்தாமலும் போகலாம்...!

இவ்வலைப்பூ எனது நாளேடு போலக் காட்சியளிக்கலாம்...சில நேரங்களில் பயணக்குறிப்பாகவோ,தன்னுரலின் வெளிப்பாடாகவோ,கவிதையைக்கொண்டதாகவோ,கவிதை போன்ற ஏதேனுமொன்றைக் கொண்டதாகவோ இருக்கலாம் அல்லது இப்போது இப்பதிவு உங்களுக்கு எவ்வாறு காட்சியளிக்கிறதோ அவ்வாறே எப்போதும் காட்சியளிக்கலாம்...
இதுவே எனது இறுதிப்பதிவாகவும் இருக்கலாம்!

இவை எல்லாவற்றையும் ஒரு கணிப்பாகவே விட்டுவிடுகின்றேன்...!

எழுதுவது நானாக இருப்பினும் இங்கு கற்றுக்கொள்ளவே வந்திருக்கிறேன்...
 
உங்கள் தோழமையோடு பின்னூட்டமும் எப்போதும் வேண்டும்...!

வாசித்தமைக்கு நன்றிகள்!!

இப்படிக்கு
நான்