Saturday, December 17, 2022

Zwigato by Nandita Das

Zwigato follows an individual who lost his job and works as a food delivery agent post-pandemic. While the lockdown has brought new rules like working from home and online classes, they are not the solution for all. The manager of a manufacturing company, quality inspector, a site engineer has nothing to do from home. Manas is one of them.


https://www.imdb.com/title/tt21998526/

Manas - Pratima couple runs a middle-class family with his mother and two children. Manas represents millions of delivery partners working with Zwigato. Just as school children polish their shoes, Manas has a statement to start his day: Today I will make ten deliveries. Anyone with a goal of ten deliveries has no rules of the road, no fear of death, and no time to stop, eat, or even drink water.

Pratima makes the home and when Manas's income is not enough she runs to do massage as a home service. Later she realizes that, it is not easy to enter apartments where there are separate lifts for residents and employees. Then she opts for sanitation work in a shopping mall at night. Despite the attractive uniform and higher salary than her husband, sick mother and Manas makes her to stay home. 

In the chain of Corporate-Worker-Consumer, it is not just individuals who meet at the inevitable point of their necessity: When people meet, their castes meets, religions meets, different classes meets, various thoughts meet, and different body odours meet. Such intersections have many stories to tell. It is not just a story of the middle class, but a story of classes. Sanitation workers, Garbage collectors, Construction workers, Apartment youths, School Principal, and other economic elites are naturally brought into the play and taken through the equally spread inequality and distress.

The film has succeeded in carving out the hierarchies of society by allowing the characters to evolve naturally and by setting the screenplay in such a way that there is no sound of campaign or pity. The job engulfs the entire family where the head doing late-night calculations of the day, a wife who lost her time with her husband, a daughter who is the best student in her class but gets mocked for the work her father doing, and a son who sits behind and carries his father's burden on his shoulders.

In a country where everything is allowed, it is easy for the employer to say 'get out' at any time but for an employee, it is not easy to throw the uniform. Both for the same reason -  there are many queuing up in office to take that job. When unemployment stands as a major problem, the film questions whether the food delivery corporate's claims of employing millions are behaving humanely. Corporate psychological violence is well depicted through AI voice that kindly speaks inhumanly by constantly monitoring employees through mobile application and giving instant punishments and fines as remedies.

The film is not expecting a revolution by pointing out the darker sides of the corporate-labor-consumer relationship. Rather, in this paradoxical system does not change easily, it teaches us to have some compassion, kindness, sense of dignity towards our fellow humans who serve us, who knock the door to meet our needs. 

Set is in Bhubaneswar, Kapil Sharma (Manas) - Sahana Goswami (Prathima), Children and Older woman fit a family well. Though most of them are theatre artists and newcomers yet nowhere it’s found odd. No dialogue or pain seems to be forced. The sporadic one-liners evoke a burst of laughter in many places. Background score by Sagar Desai is so integrated with the film that one didn't even notice its presence. The animation and the music for titles, especially at the end uplifts what the film wants to convey. But it missed the problems faced by women delivery partners, which are broader and different.

Is there any glimmer of hope apart from the climax in a film that criticizes class and corporate antagonism? It seems. In one of the earlier scenes, a boy visits for collecting garbage and asks Pratima for water. Having seen Pratima for some time, I believe what she shares is a portion of the water she drinks and she gives it the same cup which she uses to drink. I am not sure, but I hope so.


(Seen Indian Premiere at 27th IFFK, Kerala)


Friday, November 18, 2022

சாரு

புனைவுகளை விட கவிதைகளையும் அபுனைவுகளையும் அதிகம் வாசிக்கும் பழக்கமுடையவன் என்று கூறி சாருவின் கட்டுரைகள் எனக்குப் பிடிக்கும் என்றாலும் நடக்கும் விவாதங்களில் அதற்கு மதிப்பிருக்குமா எனத் தெரியவில்லை; என் தகுதி அப்படி. ஆனால், ஒரு வாசகனுக்கு சாரு என்னவாக இருக்கிறார்?! சில நேரங்களில் அவர் படைப்பை வாசித்துவிட்டு இதை அவருக்கு எழுதினால் வசை கிடைக்குமோ என்கிற பயம் கடிதம் எழுதத் தடுத்திருக்கிறது. விஷ்ணுபுரம் விருதை முன்னிட்டு நினைவில் வருபவற்றை எழுதலாம் எனத் தோன்றுகிறது. 

 
நேர்வழியெனினும் கட்டுரைகளுக்குள்ளும் சில வகைகளுண்டு. அந்த ஆட்டத்தில் நடனமொரு பாகமென்றால் அங்கங்கே தெறிக்கும் பொறிகளும் வாசகனுக்கு முக்கியம்.  அவை ஒரு ரசனைக்குறிப்பாகவோ, புத்தக/இட/திரைப்பட/ஆளுமை பெயராகவோ இருக்கலாம். ஆடுபவர் இதையெல்லாம் வழங்கிவிட்டு நேர்வழியில் செல்லலாம், எந்த வாசகன் எந்த இடத்தில் இறங்கிப்போவான் என்று யாருக்குத் தெரியும்?! என் குறுகிய வாசிப்பனுபவத்தில் இப்படி என்னைப் பாதி வழியில் இறக்கி விட்டுச் செல்பவர்கள் மூவர்: சாரு நிவேதிதா, சுகுமாரன், நாஞ்சில் நாடன். சாரு இவ்விருதை ஏற்றுக்கொண்டமை மகிழ்வளிக்கிறது.

மிக முக்கியமாக அவரின் சமூக விமர்சனங்களில் காணப்படும் பகடி மற்ற இடங்களில் காணக்கிடைக்காதது. கட்டுரை நூல்கள் மிக அரிதாகவே சிரிப்பை வரவழைக்கும் என்கையில் இவர் எழுத்தில் வெடிச்சிரிப்பு உறுதி, வயிற்றுவலி போனஸ்.  ஆனால், அவை அதைச் செய்ய எழுதப்படும் நுகர்பொருளா? தமிழக/இந்திய  சமூகத்தை உலகத்துடன் வைத்துப்பார்த்து விமர்சிக்கும் அந்தப் பார்வை நேரமும் உழைப்பும் இன்றி வந்துவிடாது; அவ்விளைபொருளின் அடிப்படை அக்கறை. அரசியல்/கலாச்சார ரீதியாக குடிமக்களாக நாம் இழப்பவை, குறைபடுபவை என்னவென்ன என்பதை எங்கெங்கெல்லாம் இடம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் சொல்லியிருக்கிறார். ஒரு மேடையில் விருது பெற்றுக்கொள்வதற்கும், ஏற்றுக்கொள்வதற்கும் உள்ள வேற்றுமையை சொல்லித்தந்தது அவரே. சாரு எழுதும் சினிமா விமர்சனம், விமர்சனம் மட்டுமல்ல; பூனை உணவுப் பிரச்சினை, உணவுப் பிரச்சினை மட்டுமல்ல. 

எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு வாழ்த்துக்கள்.  


Thursday, November 17, 2022

பச்சைக் கம்பளம்

மூன்று சிக்கனல்களிலும் பச்சை


இப்படித்தான் 

இன்றைய உலகம் திறந்து கொண்டது  

Friday, November 11, 2022

Chemistry Nobel 2022: Science and Social Science

The Nobel Prize in Chemistry has been awarded to three this year. Professor Carolyn R. Bertozzi of Stanford University, Scripps Laboratory Professor Karl Barry Sharpless, and Professor Morten P. Meldal of Copenhagen University.1




Among them, Prof. Sharpless was awarded Nobel Prize for the second time. So far, five people have received the Nobel Prize twice. His first Nobel was in 2001 for discovering a catalytic way to make molecules that do not overlap when placed on each other, like left and right hands. His name is the prefix of that reaction: Sharpless epoxidation.2

 

In April, a year after Nobel Prize, Prof. Sharpless communicated the results of his other work.3 The same year, Prof. Meldel's research dealing with solid phase synthesis was also published in an another journal.4 A chemical reaction discovered by Rolf Huisgen5 in the nineteenth century, though it is celebrated for the importance of the product it generates, kept chemists away because of the danger in handling one reactant, azide. Sharpless and Meldel used copper as a catalyst to reduce the reaction temperature and the fear of handling azides. If Sharpless's discovery was a journey of research toward a decisive conclusion, Meldel's discovery was a journey that followed a reaction that yielded an unexpected result. But both minds attained the same result: Another reaction with wide application in various streams, a reaction that gives no by-products at the end, a reaction that is not affected by extraneous factors such as water and oxygen. Most importantly, a reaction produces only one product out of two possibilities.


In an interview after his second Nobel, Prof. Sharpless says: “In a perfect reaction you don’t have side products. When the copper catalyzed reaction dropped into our lab we were surprised. You put the reactants together and collect 100% of the product and one can have this reaction in blood, soup, urine, acid and base.” 6

Figure 1: Click chemistry  © Johan Jarnestad / The Royal Swedish Academy of Sciences



Chemists call it 'click chemistry.' What is that prefix? Like the sound at the Basho's Haiku, 'old pond'? Is it the sound same as the jump of a frog in water? Or the click of a seat belt? When two molecules come closer in the presence of copper ion, an instantaneous reaction is similar to a click, but without any sound! Just as opposite poles of magnets stick together, the alkyne reacts with the azide to form a ring called 'triazole.' Because of the inert nature of the starting materials, the strength of this triazole bond which locks two of them and selectivity, we are reaping the benefits of this reaction today in the fields of medicine and materials. The molecules attained through this reaction are used as drugs for diabetes, cancer, HIV, and Alzheimer's disease, diagnostic studies, and to visualize cells. Bertozzi made it possible to carry this click reaction from the laboratory to living cells. That path is called ‘Bioorthogonal chemistry.’ What is it?

 

Bioorthogonal chemistry is the branch that performs required reactions at faster rates under physiological conditions and is inert to other functionalities in living cells.7 It is difficult to perform a chemical reaction on living cells for attaching a fluorescent molecule without harming them. Often cell functions are affected by chemicals or functionalities of chemicals affected by the cell environment. There can be many reasons, like water, oxygen, and temperature. Most of the time, an unnecessary reaction/interference harms the attempt. 



Figure 2: Bioorthogonal chemistry © Johan Jarnestad / The Royal Swedish Academy of Sciences


Bertozzi’s group worked on several chemical reactions in cells, each of them having its own merits and demerits. It was then she read the research papers of both the former published in 2002. She observed that these reactions took place at room temperature catalyzed by copper in presence of water and oxygen. But for them, the problem is copper, which kills cells. A graduate student who worked with her discussed an article that appeared in the nineteenth century utilizing strained rings for click chemistry without a catalyst. There is the strained ring of a compound waiting to undergo a reaction, like a string of a bow/guitar ready to snap at any moment, like a fruit that explodes and scatters its seeds when touched. After several attempts, they found a strained alkyne partner capable of reacting with azides at low temperatures. After attaching the cell with an azide-decorated sugar, they performed the click reaction with the former. This effort, which started to visualize cells, has expanded to deliver drugs to cells, provide beneficial bacteria in the gut, and now has stepped into cancer treatment.


Figure 3: Bertozzi used the strain-promoted click reaction to track glycans. They have a green glow in the picture.

©Johan Jarnestad / The Royal Swedish Academy of Sciences



If the above are the Chemical Science we need to discuss on this Nobel prize, Bertozzi gives us something to discuss on Social Science:

 

"The early composition of my lab at Berkeley, really the core people that did the work that the Nobel Foundation has recognized before if you look at that group of people, they are far more diverse than certainly at that time you would see in the average chemistry laboratory. I had a preponderance of female grade students at that time when our representation in the graduate program at Berkeley was maybe 30%, but my lab has over half. I had people from different backgrounds, people who identify as underrepresented minorities. And I think, that diversity of people created an environment where we felt we didn't have to play by the same old rules as scientists. We could do things like organic chemistry in living animals. Why not, right?! We didn't have to play by the rules! If there weren't the right chemistries to get the job done, we could invent new chemistries! Why not?! We didn't have to play by the rules! And I think that culture, it kind of grew organically – no pun intended – without a whole lot of steering by myself. I was very fortunate that I could actually play a supportive role in my lab, and let that diverse group of students find their voice, realize their curiosity, break the rules, and do something that twenty-five years later some people found impactful. And I owe them a great debt of gratitude."8

 

Its meaning becomes even more apparent when read against the background that Bertozzi voices for inclusion and diversity in the workplace. That is something we need to discuss in accordance with this year's Nobel prize.


References:

1.     https://www.nobelprize.org/prizes/chemistry/2022/press-release/

2.     https://www.nobelprize.org/uploads/2018/06/advanced-chemistryprize2001.pdf

3.     https://onlinelibrary.wiley.com/doi/10.1002/1521-3773(20020715)41:14%3C2596::AID-ANIE2596%3E3.0.CO;2-4

4.     https://pubs.acs.org/doi/10.1021/jo011148j

5.     https://www.nature.com/articles/s41589-020-0571-4

6.     https://www.youtube.com/watch?v=ADhhvKZAYUs&ab_channel=ScrippsResearch

7.     Bioorthogonal Chemistry: Fishing for Selectivity in a Sea of Functionality https://onlinelibrary.wiley.com/doi/10.1002/anie.200900942

8.     https://twitter.com/malycat03/status/1578254758384611328

9.     Telephonic interview – Sharpless https://twitter.com/NobelPrize/status/1577792412893724678

10.  Telephonic interview – Meldel https://twitter.com/NobelPrize/status/1577643078265061377

11.  Telephonic interview – Bertozzi https://twitter.com/NobelPrize/status/1577660360735313920

12.  The illustrations are free to use for non-commercial purposes. Attribute ”© Johan Jarnestad/The Royal Swedish Academy of Sciences”  https://www.nobelprize.org/uploads/2022/10/fig2_ke_en_22_clickReaction.pdf

13.  The illustrations are free to use for non-commercial purposes. Attribute ”© Johan Jarnestad/The Royal Swedish Academy of Sciences” https://www.nobelprize.org/uploads/2022/10/fig3_ke_en_22_bioorthogonalChemistry.pdf

Thursday, November 10, 2022

வேதியியல் நோபெல்: அறிவியலும் சமூக அறிவியலும்


வேதியியலுக்கான நோபெல் பரிசு இந்த வருடம் மூவருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலுள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் கரோலின் பெட்டோர்சி, ஸ்க்ரிப்ஸ் ஆய்வகப் பேராசிரியர் பேரி ஷார்ப்ளஸ், டென்மார்க்கிலுள்ள கோபென்ஹெகன் பல்கலைக்கழகப் பேராசிரியர் மார்டென் மெல்டல்.


 இடமிருந்து வலம்: பெட்டோர்ஸி, மெல்டல், ஷார்ப்ளஸ்

இவர்களுள் ஷார்ப்ளஸ், இரண்டாவது முறையாக நோபெல் பரிசு பெறுகிறார். இதுவரை ஐவர் இருமுறை நோபெல் பரிசு பெற்றிருக்கிறார்கள். இட வல கைகளைப்போல, ஒன்றின்மேல் மற்றொன்றை வைக்கும்போது மேற்பொருந்தாத தன்மையுடைய மூலக்கூறுகளை உண்டாக்குவதற்கான வழிமுறையைக் கண்டறிந்ததற்காக 2001ல் இவருக்கு முதல் நோபெல் வழங்கப்பட்டது. அந்த வினைக்கு இவர் பெயரே முன்னொட்டு: ஷார்ப்ளஸ் ஈபாக்சைடாக்கம்.

நோபெல் பரிசுக்கு அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் ஷார்ப்ளஸ் தன்னுடைய மற்றொரு ஆய்வின் முடிவுகளை பன்னாட்டு வல்லுநர் குழுவின்முன் சமர்ப்பித்தார். அவர்கள் ஒப்புதலுக்குப் பின் அவ்வருடமே அது வெளியானது. அதே வருடம் பேராசிரியர் மார்டென் மெல்டலின் ஆய்வு முடிவுகளும் வேறொரு ஆய்விதழில் வெளியானது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ரால்ப் ஹியுஸ்ஜென்னால் கண்டுபிடிக்கப்பட்டிருந்த ஒரு வினை, அதன் விளைபொருளைப்பொறுத்து முக்கியமானதென்றாலும், அது நிகழத்தேவையான வெப்பநிலையில், வினைபடுபொருளான நைட்ரஜன் சேர்மத்தைக் கையாளுவதிலுள்ள அபாயத்தால் வேதியியலாளர்களைத் தள்ளியே வைத்திருந்தது. ஷார்ப்ளஸும் மெல்டலும் தாமிரத்தை வினையூக்கியாகக் கொண்டு வினை நிகழும் வெப்பத்தையும், நைட்ரஜன் சேர்மத்தைக் கையாளுவதின் மீதான பயத்தையும் குறைத்தனர்.

ஷார்ப்ளஸின் கண்டுபிடிப்பு தீர்க்கமான முடிவை நோக்கிய ஆய்வின் பயணம் என்றால், மெல்டலின் கண்டுபிடிப்பு எதிர்பாரா விளைபொருளைக் கொடுத்த வினையைப் பின்தொடர்ந்த பயணம். ஆனால், இரண்டு மனங்களும் ஒரே முடிவைத்தான் கண்டன: வேதியியலின் பயன்பாட்டில் முக்கியமான இன்னுமொரு வினை, வினையிறுதியில் விளைபொருளை மட்டும் கொடுக்கும் வினை, நீர், ஆக்சிஜன் எனப் புறக்காரணிகளால் பாதிக்கப்படாத வினை. மிக முக்கியமாக, இரு விதமான சாத்தியங்களில் ஒரே ஒரு விளைபொருளை மட்டும் அதிகளவில் தரும் வினை.

இரண்டாவது நோபலுக்குப் பிறகான நேர்காணலில் ஷார்ப்ளஸ் சொல்கிறார்: ஒரு நல்ல வேதிவினை என்பது தேவையற்ற விளைபொருள்களைக் கொடுக்கக்கூடாது, வினைபொருள்களை ஒரு குவளையில் இட்டுக் கலக்கி எடுத்தால் எனக்கு விளைபொருள் மட்டும் வேண்டும் என நினைத்திருந்தேன். அமிலம், காரம், சூப், சிறுநீர் உள்ளிட்ட எல்லா நீர்மங்களிலும் இந்த வினை நிகழும் என்பதே என்னை ஆச்சரியப்படுத்தியது.


க்ளிக் வேதியியல் © Johan Jarnestad / The Royal Swedish Academy of Sciences


வேதியியல் துறையினர் அதை 'க்ளிக் வேதியியல்' என்கிறோம். அதென்ன முன்னொட்டு? பாஷோவின் கவிதையில் எழும் சப்தம் போல்? அது சப்தம்தான்: கணிப்பொறியின் மௌசை அழுத்துகையில் வரும் சப்தம், சீட் பெல்ட் அணிகையில் எழும் அதே சப்தம். இரு மூலக்கூறுகள் தாமிர அயனியின்முன் ஒன்றுக்கொன்று அருகருகே வரும்போது ஒரு கிளிக் சப்தத்திற்கு நிகரான உடனடி வினை, ஆனால் ஒலியின்றி! காந்தங்களின் எதிரெதிர்த்துருவங்கள் எப்படி சட்டென்று ஒட்டிக்கொள்ளுமோ அதுபோன்று அல்கைனும் அசைடும் வினைப்பட்டு 'ட்ரயசோல்' என்னும் வளையம் உருவாகும் வினை. அப்படி இரு மூலக்கூறுகளை இணைக்கும் இந்த ட்ரயசோல் பிணைப்பு வலுவானதென்பதால் இவ்வினையின்பயனை இன்று மருத்துவம் மற்றும் பொறியியல் துறைகளில் அறுவடை செய்கிறோம். இவ்வினைவழிப் பெருகிய மூலக்கூறுகள் இன்று நீரழிவு, புற்றுநோய், எச்ஐவி, அல்சைமர் நோய்க்கு மருந்தாகவும், நோய் கண்டறியும் ஆய்வுகளிலும், செல்களைக் காண உதவும் செல் பகுப்பாய்விலும் உதவுகின்றன.

குடுவைக்குள் நிகழும் இந்த கிளிக் வினையை, உயிருள்ள செல்களில் நிகழச்செய்து அவற்றைக் காண வழியமைத்துத் தந்தவர் பெட்டோர்ஸி. 'பயோஆர்த்தகோனல் வேதியியல்' என்னும் பாதை அது. அதென்ன பயோஆர்த்தகோனல்?


பயோஆர்த்தகோனல் வேதியியல் © Johan Jarnestad / The Royal Swedish Academy of Sciences


உயிருள்ள செல்களில், அவற்றிற்குப் பாதிப்பில்லாமல் ஒரு வேதிவினையை நிகழ்த்தி, ஒளிரும் மூலக்கூறொன்றை அதனுடன் இணைத்து நுண்ணோக்கியால் அவற்றைக் காணவேண்டும் என்றால் அது எளிதான செயல் அல்ல. பெரும்பாலும் வேதிவினைகளால் செல்கள் பாதிக்கப்படும் அல்லது செல்களால் வேதிவினை பாதிக்கப்படும். இதற்கு நீர், ஆக்சிஜன், வெப்பநிலை எனப் பல காரணங்கள் இருக்கலாம். மிக முக்கியமாக, செல்களிலும் வேதிப்பொருள்களிலும் உள்ள வினைத்தொகுதிகள். பெரும்பாலான நேரத்தில், தேவைப்படும் வினையைவிட தேவைப்படாத வினை(கள்) நிகழ்த்து காரியத்தைக் கெடுத்துவிடும். எந்தவிதக் குறுக்கீடுமின்றி உயிருள்ள செல்களில் நமக்குத் தேவையான வினையை மட்டும் நிகழ்த்தும் பிரிவு, பயோஆர்த்தகோனல் வேதியியல்.

பெட்டோர்ஸி பல வேதிவினைகளைச் செல்களில் முயற்சித்தார். அப்போதுதான் 2002ல் வெளிவந்த முன்னவர் இருவரின் ஆய்விதழைகளையும் படிக்கிறார். அவ்வினைகள் நீரும் ஆக்சிஜனும் உள்ள சூழலில் தாமிரத்தின்முன் அறை வெப்பநிலையிலேயே நிகழ்வதைக்கண்டார். ஆனால், அவருக்குப் பிரச்சினை தாமிரத்தால்; அது செல்களைக் கொல்லும். அவருடன் பணியாற்றிய மாணவர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளிவந்த இதுபோன்ற வினையொன்றைக் குறித்து விவாதிக்கிறார். அது இழுத்துக் கட்டப்பட்ட, எந்நேரமும் அறுந்து விழத் தயாராக இருக்கும் நாண் போல, தொட்டால் வெடித்துச் சிதறி விதைப்பரப்பும் கனி போல, தன் நிலை வழுவக் காத்திருக்கும் வளைய சேர்மத்தில் நிகழும் கிளிக் வினை. பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு குறை வெப்பநிலையில் வினைபுரியத் தயாராக இருக்கும் வளைய அல்கைன் சேர்மத்தை உருவாக்கி, ஒளிரும் மூலக்கூறுடன் இணைத்தார். அசைடு தொகுதி இணைக்கப்பட்ட செல்லின் நிலைத்தன்மை உறுதிப்பட்டவுடன், முன்னதை வைத்து கிளிக் வினை நிகழ்த்தினார் பெட்டோர்ஸி. செல்களைப் பகுத்தாய்வதற்காகத் துவங்கப்பட்ட இம்முயற்சி, செல்களில் மருந்தைச் சேர்க்க, நன்மை செய்யும் பாக்டிரியங்களை வயிற்றினுள் பாதுகாப்பகச் சேர்ப்பிக்க என விரிந்து தற்போது புற்றுநோய் சிகிச்சையில் காலடி வைத்திருக்கிறது.


பெட்டோர்ஸி நிகழ்த்திய கிளிக் வினையால் பச்சை நிறத்தில் ஒளிரும் செல்சுவர்  


நோபெல் நமக்களிக்கும் கிடைக்கும் அறிவியல் செய்திகள் இவையென்றால் கரோலின் பெட்டோர்ஸி சமூகத்திற்குச் சொல்லும் செய்தி ஒன்று:

“தற்போது நோபெல் பரிசுக்குழு என்னை எதற்காக அங்கீகரித்திருக்கிறதோ அந்த ஆய்வை நான் பேக்கர்லி ஆய்வகத்தில் இருந்தபோது துவங்கினேன். அப்போது என்னுடன் பணியாற்றியவர்கள் வெவ்வேறு சமூக-கலாச்சார பின்புலத்தைச் சார்ந்தவர்கள், சிறுபான்மையினர்கள்; அவர்களில் பெண்கள் ஐம்பது சதவீதத்திற்கும் மேல். அதாவது, உயர்கல்விக்காக வருபவர்களில் முப்பது சதவிகிதம் மட்டுமே பெண்கள் இருந்த காலம். அப்போது நாங்கள் அனுபவப்பூர்வமாக ஒன்றை உணர்ந்திருந்தோம்: ‘நாம் யாரோ வகுத்த விதிகளின்படி செயல்பட வேண்டியதில்லை, குறிப்பாக ஆய்வாளர்களாகிய நாம். இயற்கை எப்படித் தனக்கான வழிகளைத் தானே உருவாக்கிக் கொள்கிறதோ அதுபோல. ஒன்றைச் செய்ய சரியான வேதிவினை இல்லையென்றால் என்ன?! நாம் ஒன்றை உருவாக்குவோம். ஏன் கூடாது? நாம் எந்த விதியையும் பின்பற்ற வேண்டியதில்லை.’ நான் நினைக்கிறேன், அத்தகைய ஒரு சூழலில், என்னுடைய வழிகாட்டுதல் என்பது அதிகமின்றியே, அக்குழுவின் பன்முகத்தமையால், அம்மாணவர்களின் தனித்துவமான குரலால், தன் கனவைத் தானே கண்டறியும் முயற்சியால், எதிர்ப்படும் விதிகளை உடைத்தெறியும் திறனால் எய்தியவற்றை, அதன் சமூகத் தாக்கத்தை இருபத்தைந்து வருடம் கழித்துச் சிலர் அங்கீகரித்திருக்கிறார்கள். அதன்பொருட்டு அந்த மாணவர்களுக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.”

பெட்டோர்ஸி பணிச்சூழலில் பன்மைத்துவத்தை ஆதரிப்பவர், தன்னைப் பால் புதுமையினராக, தன்பால் ஈர்ப்பினராக அறிவித்துக்கொண்டவர் எனும் பின்புலத்தைக்கொண்டு வாசிக்கையில் இதன் பொருள் இன்னும் துலக்கமாகிறது. அது இப்பரிசின்பொருட்டு நாம் கலந்துரையாடவேண்டிய பொருளும்கூட.

 

உதவிய இணைப்புகள்:

1.     https://www.nobelprize.org/prizes/chemistry/2022/press-release/ 

2.     Telephonic interview – Sharpless https://twitter.com/NobelPrize/status/1577792412893724678

3.     Telephonic interview – Meldel https://twitter.com/NobelPrize/status/1577643078265061377

4.     Telephonic interview – Bertozzi https://twitter.com/NobelPrize/status/1577660360735313920

5.     The illustrations are free to use for non-commercial purposes. Attribute ”© Johan Jarnestad/The Royal Swedish Academy of Sciences”  https://www.nobelprize.org/uploads/2022/10/fig2_ke_en_22_clickReaction.pdf

6.     The illustrations are free to use for non-commercial purposes. Attribute ”© Johan Jarnestad/The Royal Swedish Academy of Sciences” https://www.nobelprize.org/uploads/2022/10/fig3_ke_en_22_bioorthogonalChemistry.pdf

7.     https://www.nature.com/articles/s41589-020-0571-4

8.     https://twitter.com/CarolynBertozzi/status/1578133339831095296

9.     https://twitter.com/malycat03/status/1578254758384611328

10.  https://twitter.com/scrippsresearch/status/1577786879512121347

11.  https://www.pnas.org/doi/10.1073/pnas.0707090104?url_ver=Z39.88-2003&rfr_id=ori%3Arid%3Acrossref.org&rfr_dat=cr_pub++0pubmed


உயிர்மை டிசம்பர் 2022 

Friday, September 9, 2022

Birthday gift

All of a sudden

My friend asks me to wish for her birthday

I have nothing in hand

Have never felt that important

So I have given an empty hand

No word came from a dry heart

So I asked if she'd a cake

I feel very sad when looking back

If I had a knife

I would have cut my heart into twenty 

and given a piece.

Saturday, July 30, 2022

அடைக்குந்தாழ்

எங்கள் வீட்டில் 

புதிதாய்க் குடி வந்தவள்

எனக்கும் மூத்தவள் 

இல்லந் துறந்தவள்

தலைவன் வரும்வரை 

ஒவ்வொரு நொடியையும்  

விரட்டி அடிப்பவள்  


கலங்கரை விளக்கத்தின் 

வெளிச்சப்புள்ளி போல்

எதிர்ப்படுகையில் மட்டும்

'எப்பண்ணா வந்தீங்க' 

என்பாள் முகம் மலர்ந்து

பிறகொரு 

சொல்லிறின்றி முகமின்றி 

மறைந்தே போவாள்  

திடீர் மழையில் மூழ்கிய 

குளத்தாம்பல் போல்


கேள்விகளின் உலகில் 

அன்புடை நெஞ்சம் கலப்பதில் 

ஆயிரம் சிக்கல்கள் 

ஆயிரம் பயங்கள் 


மலர்தலின் உலகில் 

ஒரு பெண் மௌனமாவதைப்போல் 

ஒரு பெண் வீடடங்குவதைப்போல் 

வேறொரு துக்கம் உண்டா?

Tuesday, July 12, 2022

சகலகலா சவரக்காரன்

ஒரு கவிதைத்தொகுப்பு முழுவதும் ஒரே வகைமையிலான/பாடுபொருளைக்கொண்டதான கவிதைகளால் நிரம்பிவருவது தமிழுக்குப் புதிதல்ல. ஆனால், எனக்குத்தெரிந்து ஒரு சமூகத்தைச் சார்ந்தவர்களிடமிருந்து அச்சமூகம் சார்ந்த பாடுபொருளைக்கொண்ட கவிதைத்தொகுப்புகளில் இது இரண்டாவது - ப.நடராஜன் பாரதிதாஸ் அவர்களின் "ஒரு சகலகலா சவரக்காரன் பராக் பராக்". இவருக்குமுன் கலைவாணன் இஎம்எஸ்-ன் "ஒரு சவரக்காரனின் கவிதை மயிறுகள்". 

பாடுபொருள் ஒன்றேயென்றாலும் தொகுப்பு முழுவதும் சுயசாதியை நோக்கிய கேள்விகள்/விமர்சனங்கள், பகடி, ஆதங்கம், சுயகழிவிரக்கம் எனக் கலவையான உணர்ச்சிகளால் நிறைந்துள்ளது. தொழில்நுட்பரீதியில் பார்த்தால் சில கவிதைகள் அபாரமான சொல்லாட்சியினால் ஒளிர்கின்றன. 

இன்றைக்கும் 'மாப்பிள்ளை சேவிங் செய்ய மறுத்தவர் கொலை' என்னும் செய்தி வரத்தான் செய்கிறது. என் அம்மா அவர்களை சாதிப்பெயர் சொல்லித்தான் விளிக்கிறாள். நம் சோ கால்டு பழமொழிகளிலும், நகைச்சுவைகளிலும் அவர்களை இழிவுசெயும் மனிதர்கள்தான் நாம். ஒவ்வொருமுறை முடிவெட்டும்போதும் தடவும் கீறல் விழுந்த மென்மையான கரங்கள்தான் அவை. ஆனால், கீறலில் தெறிக்கும் குருதியில் எழுதப்படும் கவிதைகளுக்கு அறச்சீற்றம் உண்டு. அவற்றை எதிர்கொள்ளத்தான் நாணமாக இருக்கிறது.

நாட்டாமை எட்ன தூரத்தில் வரும்போதே

திண்ணையிலிருந்து எந்திரிச்சு நிக்கணும்

எதிர்ல வந்தா

வளஞ்சி நின்னு வழிவிடணும்

வீட்டுக்கு அழைச்சி

மேல்முடி செரைச்சுக்கிட்டு

அடிமுடியையும் வழிக்கணும்

இல்லன்னா அடிப்பாரு

வாங்கிக்கணும்


மழை தப்பிட்டா அளப்பு தப்பிடும்

செரைப்பு மட்டும் தப்பாது

வருசமெல்லாம் வழிக்கும்போது

எங்கவேணா தொட்டுக்கலாம் தொடச்சிக்கலாம்

மற்றபடி

வாசற்படி தாண்டினாலே வாயிலவரும் நல்லா


ஆனா பாருங்க

அரசாங்க கெஜட்டு  

அவரும் நானும் எம்.பி.சி.ன்னு சொல்லுது


அவருகிட்ட எப்படி சொல்றது

நீயும் நானும் ஒன்னுதாயான்னு

அரசிடம் யார் சொல்வது

நானும் அவரும்

ஒன்னுயில்லையின்னு.


..



வாழ்நாளில்

வாசற்படிதாண்டி வராண்டாவிற்குக்கூட

அழைக்காதவன் அனுமதிக்காதவன்  


பளிச்பளிச்சென்று அழகுபடுத்திக்கொண்டு

புளிச்புளிச்சென

சாதித் தொழிலைச்சொல்லி காரி உமிழ்ந்தவன்

என்குலம் சொல்லி கோத்திரம் சொல்லி

சாதிபோதை ஏற்றி

அவனுக்கெல்லாம் திருத்தலாமா

மீறினால்

தானே இடிந்துவிழும்

தானே தீப்பற்றும்


பொறம்போக்குத்தனே உன்குடிசை

மனதில்கொள்

ஊரோடு ஒட்டிவாழ்-இல்லை

ஊரே உனை வெட்டி வாழும்

உயிர் பயம் காட்டுகிறான்

ஊர் பஞ்சாயத்தில்


ஓர்குடி நாம்

என் செய்குவோம் தந்தையே 

நீ கத்தியைக் கொண்டுவா

நான் கத்திரி கொண்டு வருகிறேன்

இவனுக்கெல்லாம்

மயிர்வெட்டி   வாழ்தலைவிட

உயிர்வெட்டிச் சாகலாம்.


Tuesday, June 28, 2022

நிறைந்து வழிவது...

சேச்சிக்கும் எனக்கும்

ஒரே வேலைதான்:

அவள் அலுவலகக் குப்பைகளைக் 

கூடையில் சேமிக்கிறாள்,

நான் கணிப்பொறியில்.

எதிர்ப்படும் போதெல்லாம்

ஒரே கேள்விதான்:

'காப்பி குடிக்காணோ'

'ம், காப்பி குடிக்கத்தான்'

முதல்முறை போல அவளும் கேட்பாள்

முதல்முறை போல நானும் சொல்வேன்

நடையைக் குறைக்காமல்.

ஒருமுறை அலுவல் கூட்டத்தினிடை 

அவளே வந்தாள்

ஊற்றிய காப்பி விளிம்பைத் தொட்டதை 

எப்படிச் சொல்ல?

காப்பி கூடிப்போயென்றா? 

இல்லை 

சிநேகம் கூடிப்போயென்றா?

Friday, June 24, 2022

காலங்காலமாய்...

அந்தக் குடை நடக்கும்

அந்தச் சைக்கிள் ஓடும்

இவ்விள வெயிலில்

காற்றில் ஆடும் 

கொடியின் நுனியென 

ஒரு கரம் நீண்டு 

சைக்கிளைத் தொடவே 

அது நடக்கும் 

அந்தச் சைக்கிள் நடக்கும் 

Wednesday, June 22, 2022

என் செல்லமே...

டேங்க்கின் மீதமர்ந்து 

நீ செலுத்தும் வண்டி 

ஓடுவது பெட்ரோலில் அல்ல,

அதன் சக்கரம் சுழல்வது

பூமியிலும் அல்ல.

இடம் வலம் என

நீளும் உன் கை 

சுட்டும் இடத்தில் 

நிற்பதுவும் 

இறங்கிச் செல்வதுவும் 

யாரும் அல்ல.

அடிவானம் சாலையை முத்தும் இடத்தில்

உன் கை

கொஞ்சம் விரும்பி 

கொஞ்சம் தவறி 

மேல்நோக்கி உயருமென்றால்

இந்தப் புவியில்

உனைப் பிடித்திருத்தப் போவது  

எதுவும் அல்ல.

Monday, June 20, 2022

வைகறை வெளிச்சம்

புலரியில் வீடிறங்கி

பின்முதுகில் நீர் சொட்ட

வேர்களை விட்டுவிட்டு

இலைகளுக்கு நீர்விடும்

இவள்

குளிப்பாட்டுவது பிள்ளைகளைத்தான்.

இதைச் சொல்வது நானல்ல,

அவள் முகமேதான்.

Thursday, June 16, 2022

அடித்தோழி!

பேசிக்கொண்டே

உரையாடலின் அபாய வளைவை 

எத்திவிட்டோம் 

சட்டென நீ 

உன் வாழ்வின் 

தாளாத சுமையொன்றை இறக்கிவைத்தாய் 

அதன் எடையில் என் முதுகு 

வளைந்தேவிட்டது 

மூச்சுவிடவே அல்லற்படும் நான்  

புதுப்புது சொற்களால் 

புதுப்புது கரங்களால்  

பவர் ஸ்டியரிங் இல்லா 

லாரி டிரைவரைப்போல்  

குப்புறப்படுத்துக்கொண்டு 

இப்பேச்சின் திசையைத் 

திருப்புவதைப் பார்.

Saturday, June 4, 2022

நியாயம்மாரே

 ஆசான்களே... 

முன்னோடிகளே... 

கொஞ்சம் இங்கே பாருங்கள்:  

நான் சுமாரான மாணவன்தான் 

நகலெடுப்பவன்தான் 

தேய்வழக்குகளை உபயோகிப்பவன்தான்

நீங்கள் எவ்வளவு சொல்லியும் 

கேட்காதவன்தான் 

அதற்காக ஏன் என்னைக் கைவிட்டீர்?

எழுத்துப் பிழைத்திருக்க

உண்மையும்

எழுதப் பிழைத்திருக்க

மீதமும் போதும் என 

ஏன் சொல்லித்தரவில்லை? 

Saturday, May 28, 2022

அமைச்சர் பொன்முடி பேசியவையும் நாம் பேசவேண்டியவையும்

 உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின்இந்தி படித்தவர்கள் கோயம்பத்தூரில் பானிபூரி விற்கிறார்கள்” என்னும் கருத்தை தொழில்/வர்க்க ஏற்றத்தாழ்வு குறித்த கருத்தாக மட்டும் கண்டு வட இந்திய ஊடகங்களும், தமிழகத்தில் சிலரும் கண்டித்ததை வெறுமனே கடந்துவிட இயலாது. ஒன்றிய அரசின் மொழிக்கொள்கைகளால் மொழிச் சிறுபான்மையினருக்கு நிகழும் அவமானங்களையும் வாய்ப்பிழப்புகளையும் உணர்ந்த ஒரு மனம் அதைக் கோபத்துடனோ எள்ளலுடனோ முன்வைக்கும்போது சரியான தர்க்க அறிவுடன் வெளிப்படுத்தவேண்டிய அவசியமும் இருக்கிறது.

எப்போதெல்லாம் மொழிக்கொள்கை தொடர்பான எதிர்ப்புகள்/விவாதங்கள் தமிழகத்திலிருந்து எழுகிறதோ, அப்போதெல்லாம் அது தமிழ்-இந்தி இருமுனைப் போட்டியாக மட்டும் சுருக்கி, மொழிப்பெருமை-மொழிப்பெரும்பான்மை, அரசுப்பள்ளி-தனியார்பள்ளி, மாணவர் உரிமை-அரசின் இடையீடு, பிற மாநிலங்கள்-தமிழ்நாடு என விவாதங்களை எடுத்து நீர்க்கச் செய்யும் கள்ளத்தனம் கண்டிக்கப்படவேண்டும். அதற்கான வழி இந்தியினால் தமிழகத்திற்கு மட்டுமல்லாது இந்தி பேசும் மாநிலங்களிலேயே அசமத்துவதுடன் நடத்தப்படும் குடிமக்களைப்பற்றிப் பேசவேண்டும்; ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்தில் ஒரு மொழியினால் எல்லா மாநிலத்தவரும் என்னென்னவெல்லாம் இழக்கிறார்கள் என்பதுவும் பேசப்பட வேண்டும்.

கல்வி வேலைக்கான இடம்பெயர்வுகள் தவிர்க்க இயலாதவை எனும்போது வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் மற்றமைக்கு நிகழும் இடம்பெயர்வுகள் சமமாகப் பார்க்கப்படுவதும் தவிர்க்க இயலாதது. அதே நேரத்தில் இடம்பெயர்வுகள் எதன்பொருட்டு நிகழ்கின்றன என்பதுவும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியதும் அவசியம். பெரும்பாலான இடம்பெயர்வுகளுக்கு வேலைவாய்ப்பின்மைதான் காரணமெனினும் மக்கள் தொகை, அரசின் திட்டங்கள், கல்வி - தொழில் வளர்ச்சி, மனிதவளக் குறியீட்டில் மாநிலங்களின் இடம் என பலவற்றைத் தொட்டுச் செல்லவேண்டியிருக்கிறது. அதுமட்டுமல்லாது சமூக பொருளாதார அடிப்படையில் யார்யாரெல்லாம் இடம்பெயர்கிறார்கள் என்பதும் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டியது அவசியமிக்கிறது.

தெற்கிலிருக்கும் பானிபூரி விற்பவர்கள், ஆடைத் தொழிற்சாலை, கட்டிட வேலை, துப்புரவுப்பணியாளர்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட/கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களிலிருந்து வருபவர்கள். தென்னகம் நோக்கி வரும் மற்றொரு பிரிவினர் எல்லாமும் வாய்க்கப்பெற்ற சாதிய/வர்க்க நிலையில் மேற்படியில் இருப்பவர்கள். சென்னை பெங்களூரு உள்ளிட்ட நகரங்களிலுள்ள தனியார் மென்பொருள்/சேவைத்துறைகளில் உயர்பதவி வகிப்பவர்களும் கூட. அவர்கள் எந்த மொழியினால் இந்த வாய்ப்பைப்பெற்றார்கள் என்கிற கேள்வியைக் கேட்போம். உடன் அங்கு நடக்கும் மொழி, இன, சாதிய அரசியல் குறித்தும் பேசுவோம். கர்நாடக மண்ணில் கன்னடிகர்களிடம்இந்தி பேசக் கற்றுக்கொள்” என்னும் தடித்தனம் குறித்துப் பேசுவோம்.   பானிபூரி விற்பவர்களுக்கு நிகராக இவர்களையும் வைத்துப்பேசுவது அவசியம். 

எனவே நாம் விவாதிக்க வேண்டியது இந்தியினால் நாம் பெற்றது என்ன/பெறப்போவது என்ன என்பதை மட்டுமல்ல, இந்தியினால் நாம் என்னென்னவெல்லாம் இழந்தோம்/இழந்துகொண்டிருக்கிறோம் என்பதையும்தான். மத்திய அரசுப்பணி (இரயில்வே, எஸ்எஸ்சி, இராணுவம்) மற்றும் கல்வி/ஆய்வு உதவித்தொகைக்கு நடத்தப்படும் எழுத்து/நேர்முகத்தேர்வுகள் (NET), இந்தி பேசுபவர்களுக்கு அனுகூலமாக இருப்பதுவும் இத்தகைய விவாதங்களில் சுட்டிக்காட்டப்பட வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுகள் எவ்வாறு வட இந்தியர்களுக்கு மட்டும் சாதகமாக இருக்கிறது என்பதையும் தேர்வில் அவர்கள் தேர்ச்சி சதவிதம் அதிகமாக இருப்பதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

தமிழ் மட்டுமே பேசத்தெரிந்த பெற்றோரும் சுற்றமும் ஆரம்பக்கல்வி ஆசிரியர்களும் அமையப்பெற்ற நான், அரசுப்பள்ளியில் சேர்ந்த பின்னரே, ஆங்கிலத்திற்கும் முன், தமிழில் எழுதப்பட்டிருந்த இந்திச் சொற்றொடரை வாசித்தேன்: சர்வ சிக்ஷ்ய அபியான் திட்டம். ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு/விண்கலன்களுக்கு இந்தியில் மட்டுமே பெயர் வைக்கும் பழக்கம் எனக்கும் முன்பே பிறந்து என்னுடனேயே வளர்ந்து இன்னமும் துன்பங்களைக் கொடுத்தவண்ணமே இருக்கிறது. இன்றும் தேசிய அளவிலான போட்டித்தேர்வுகளில் கேள்வித்தாள் ஆங்கிலத்தில் இருந்தாலும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த கேள்விகளுக்கு ஒருமுறையும் பதில் சரியாக எழுதியதில்லை. தேர்வுக்கான வாசிப்பில்லை எனலாம்; ஆனால், இந்தியறிந்த ஒருவருக்கு அந்தப்பெயராலேயே திட்டத்தின் நோக்கம் விளங்கி வாசிப்பில்லையெனினும் பதிலளிக்க இயலும்.

ரூபாய் நோட்டுக்கள், பாஸ்போர்ட், தொடர்வண்டிப்பயணச் சீட்டுகள், விமானத்தினுள் செய்யும் அறிவிப்புகள், ஒன்றிய அரசு நிறுவனங்கள், கல்வி நிலையங்களில் மக்கள் தொடர்பில் நிகழும் மொழி சார்ந்த அசமத்துவச் செயல்பாடுகள், ஒன்றிய அரசு ஒவ்வொரு மொழிக்கும் செலவிடும் ரூபாய்கள், சிறப்பு தினங்கள், இந்திப் பிராந்தியங்களில் மொழிச்சிறுபான்மையினர் பயிலும் ஆரம்பக் கல்விச் சாலைகளில் தாய்மொழியில் நூல்கள் இல்லாத அவலம், ஆங்கிலத்தை அணுக இந்தி அவர்களுக்கு எங்கனம் தடையாக இருக்கிறது போன்றவற்றை விளக்க ஆரம்பித்தாலே எத்தகைய அசமத்துவம் இம்மண்ணில் மொழிவழி நிகழ்கிறது என்பதைக் கண்டுகொள்ள இயலும். நாம் தொட வேண்டியது ஒட்டுமொத்த இந்திய மனங்களை, அது வெறுப்பின்-எள்ளலின் மொழியில் சாத்தியமில்லை. குறிப்பாக ஊடக வியாபார யுகத்தில்.

எனவே மொழி தொடர்பான விவாதத்தில் இனி இந்தி எப்படியெல்லாம் எங்களைத் துன்பப்படுத்துகிறது, என்னென்ன வாய்ப்புகளை இழக்கிறோம் என்பதைப் பேசுவோம். கோயம்புத்தூரிலிருந்து சென்னை செல்கையில் விமான அறிவிப்புகள் தமிழில் இல்லை என. பாஸ்போர்ட்டில், பயணச்சீட்டில் எங்கள் தாய் மொழி இல்லை, ஒரு தொலைபேசி அழைப்பில் ஆங்கிலக் குரலுக்கு காத்திருக்க வேண்டியிருக்கிறது என. வருடம் ஒருமுறை எதாவது ஒரு தேர்வை தமிழிலும் நடத்தவேண்டும் என நாங்கள் சாலைக்கு வரவேண்டும் என. தமிழகத்திற்கு வந்து பாருங்கள் என்போம்: திருப்பூரிலும் சென்னையிலும் இந்தி பேசுபவர்கள் அதிகமுள்ள இடங்களில் பேருந்தில் இந்தி மொழிப் பலகைகள் இருப்பதை, பேருந்துக்கு எல்லா இடங்களிலும் எண்கள் வழக்கப்பட்டியிருப்பதை, கன்னியாகுமரியில் வட இந்திய மொழிகள் தமிழர் நாவில் உறவாடுவதை.

சொல்லுவோம் "இந்தி கற்றுக்கொள்ளுங்கள், நல்லது" என்பதை யாரும் எடுத்துரைக்க வேண்டியதில்லை என. தாய்மொழியும் ஆங்கிலமுமே வாசிக்க இயலாத கற்றல்குறைபாடுகள் இருக்கும் தலைமுறையிடம் தங்கத்தட்டில் இன்னொரு மொழியை வைத்து நீட்டுவதில் உபயோகமில்லை என்று. இம்மக்களின் பிரதிநிதிகள் இங்கு ஆளவும் முரண்படவும் இருக்கிறார்கள் என. எங்களுக்கென்று ஒரு வரலாறு இருக்கிறது, சுயசிந்தனை இருக்கிறது, எது நல்லது என சிந்தித்து முடிவெடுக்கும் பொறுப்பை எங்களிடமே விட்டுவிடுங்கள் என்பதைச் சொல்லுவோம். கூடவே உங்கள் அறிவுரைகள் எங்களுக்கு ஆபாசமாக இருக்கிறது: சைவ உணவுக்கு மாறுங்கள், வெங்காயம் பிடிக்கவில்லை எனில் சாப்பிடாதீர்கள் என்னும் குரல்கள் எத்தகைய அருவருப்பை உண்டாக்குகிறதோ அத்தகைய அருவருப்பு என்பதையும்.

எனவே நாம் இந்தி-தமிழ் என நிறுத்தும் கருத்தியல்களைக் களைந்து இந்தி-இந்திய மொழிகள் என நகர வேண்டியது அவசியம். இவற்றையெல்லாம் செய்ய பல ஆண்டுகள் ஆகும்; ஏனென்றால், இந்தி தேசிய மொழி இல்லை என்கிற பொய்யை உடைக்கவே நம் ஆரம்பக் கல்வியிலிருந்து வேலையைத் துவங்க வேண்டியிருக்கிறது. இந்தி தேசிய மொழி அல்ல என்கிற சொற்றொடரை நாம் வாய்ப்பிருக்குமிடங்களில்லாம் திரும்பத் திரும்ப சொல்ல வேண்டும்; நம் விவாதங்களை அப்படித்தான் துவங்க வேண்டும்.

அனைத்துப் பள்ளிகளிலும் பயிற்றுவிக்கப்படுவதும், இந்திய மொழிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டு சாகித்ய அகாதெமி விருது வழங்கும், நோபெல் பரிசுகளைப் பெற்றுத்தந்த ஆங்கில மொழிக்கு எதிரான ஒரு வெறுப்பும் சமீபகாலங்களில் அதிகளவில் பரப்பட்டுக் கொண்டிருக்கிறது; நாம் அதற்காகவும், அது ஏற்படுத்தித்தரும் வாய்ப்புகளுக்காகவும் இந்தி ஏற்படுத்தும் மொழிச்சவத்துவமின்மை குறித்து உரையாடியாகவேண்டியிருக்கிறது. மொழிப்பன்மைத்துவம் என்பது இந்திய ஒன்றியத்தின் சிக்கல் மட்டுமல்ல, ஆப்ரிக்க நாடுகள், சுவிட்சர்லாந்து, மலேசியா உள்ளிட்ட பல்வேறு மொழிக்குடும்பங்களைக் கொண்ட நாட்டிலும் உள்ள பொது அம்சம். அதை அவர்கள் எங்கனம் எதிர்கொண்டார்கள், பெரும்பான்மையினர் சிறுபான்மையினர் என மொழி ரீதியிலான ஏற்றத்தாழ்வில்லாத ஒரு சமூகமாக அவர்கள் எவ்வாறு நிற்கிறார்கள் என்பது குறித்தும் நாம் உரையாடலைத் துவங்கவேண்டியிருக்கும். அது ஒட்டுமொத்த இந்திய மனங்களைத் தொடுவதாக நிச்சயம் அமையும்.