Sunday, June 4, 2023

பள்ளிக்கல்வி - ஒரு விவாதம்

கேரளப் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடத்தப்பட்ட மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு நிகழ்வில் மாணவர் - ஆசிரியர் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். உடன் கர்நாடக, ஒரிசா, கேரள மாநில மாணவர்களும் கலந்து கொண்டனர். ஒவ்வொருவரும் அவரவர் வசதிக்கேற்ப மாநில/ஒன்றிய/தனியார் பள்ளிகளில் பயின்றிருந்தனர். அமர்வின் நோக்கம் எங்களுடைய பள்ளிக்கால அனுபவங்கள், எவற்றையெல்லாம் ஆசிரியர்கள் செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என நினைக்கிறோம் என்பதைக் குறித்துப் பேசுவதாக இருந்தது.

கற்பித்தல் என்பதைத் தாண்டி தமிழ்நாட்டுக் கல்விச் சூழலுடன் இணைத்து சிலவற்றைப் பேசலாம் என எண்ணினேன். தாய்மொழிக் கல்வி, நுழைவுத் தேர்வுகள், தேசியக் கல்விக் கொள்கை, போட்டித் தேர்வுகள், இட ஒதுக்கீடு இவற்றைக் குறித்த தமிழ்நாட்டின் பார்வை பிற மாநிலங்களைக் காட்டிலும் தனித்துவமானதென்பதாலும், அண்மையில் கல்லூரிச் சுற்றுலா உள்ளிட்ட சில புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருப்பதாலும் அவற்றைக் குறித்து ஆசிரியர்களின் சிந்தையைத் திருப்பலாம் என நினைத்தேன். அவ்வரங்கில் நிகழ்த்தவற்றைக் குறித்து இங்கே பகிர்ந்துகொள்ளத் தோன்றியது.

முதலாவதாக அரங்கு அமைக்கப்பட்டிருந்த விதம்: முகாமில் ஆசிரியர்களே மாணவர்கள், எனவே அவர்கள் மேடைக்குக் கீழ். "ஆசிரியர்கள் மாணவர்களாகவும், மாணவர்கள் ஆசிரியர்களாகவும் இருக்கப் போகும் இந்த நிகழ்வு எனக்கு வித்தியாசமாக இருக்கிறது, எப்படித் துவங்குவதெனத் தெரியவில்லை - மரியாதைக்குரிய மாணவர்களே... நான் தமிழகத்தை சேர்ந்தவன், பள்ளி, கல்லுரிப் படிப்புகளை அரசுக் கல்வி நிறுவனங்களில் முடித்தவன், தமிழகத்தின் பார்வையிலிருந்து சிலவற்றைச் சொல்லலாம் என நினைக்கிறேன்." எனத் துவங்கினேன்.

புகைப்படம்: சமதா மேத்யூ 

மாணவர் இருக்கையும் ஆசிரியர் இருக்கையும் நம் குணத்தையே மாற்றிவிடும் போலும். சலிப்பைக் காட்டும் உடல்மொழி, திறன்பேசியை நோக்குதல், அடுத்திருப்பவருடன் உரையாடல் போன்ற மாணவர்களுக்குரிய குணாம்சங்கள் ஆசிரியர்களிடமும், இவற்றைக் கண்டும் பொறுமையிழக்கும் ஆசிரியரின் குணம் எங்களுக்கும் தொற்றிக்கொண்டதையும் உணர முடிந்தது. ஆனால், இங்கே இரு தரப்பினரும் மற்றவர்மேல் விமர்சனம் வைக்கும் இடம். இதே ஜனநாயகத்தன்மை எல்லா வகுப்பறைகளிலும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்கிற எண்ணம் வராமலில்லை.

முதல் சுற்றின் விவாதப் பொருள் பயிற்றுமொழி. கேரளம் மற்றும் கர்நாடகத்தில் பத்தாம் வகுப்புவரை தாய்மொழிக் கல்வி உண்டு. கர்நாடக நண்பர் தாய்மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மாறுவது கடினமாக இருந்தது எனவும், அறிவியலை சொல்லித் தருவதை விட செயல்முறைக் கல்வி இருந்திருந்தால் கற்பது எளிதாக இருந்திருக்கும். எப்படியென்றால், முப்பட்டகம் வெள்ளொளியை ஏழாகப் பிரிக்கிறதென்பதை வகுப்பறையில் நிகழ்த்திக் காண்பிப்பது கற்றலை இன்னமும் உற்சாகமானதாக்கியிருந்திருக்கும் என்றார். ஆசிரியர்கள் அவர் எடுத்துக்காட்டிற்குச் சொன்னதைப் பதினொன்றாம் வகுப்பு செய்முறைப்பாடம் எனப் பதிலளித்துக் கடந்தனர்.

பள்ளிகளின் மொழிக் கொள்கை தொடர்பான விமர்சனத்தைக் கல்லூரி மாணவர் ஒருவர் வைத்தார். தனியார் பள்ளியில் படித்தவர், அங்கேயும் பள்ளி வளாகங்களில் ஆங்கிலத்தில் பேசுவது கட்டாயம், மீறுபவர்களுக்கு அபராதம் இருந்தது என்றார். மொழி கற்றலில் இவ்வளவு இறுக்கம் வேண்டமெனவும் கேந்திரிய வித்யாலயங்களில் தாய்மொழிக் கல்விக்கே வாய்ப்பில்லை எனவும் குறிப்பிட்டார்.

மொழி தொடர்பான விவாதத்தில், தாய்மொழிக் கல்வியே சிறந்தது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. கல்வியில் முன்னிலையில் இருக்கும் வடக்கு ஐரோப்பிய நாடுகள் தாய் மொழியிலேயே பயிற்றுவிக்கின்றன, மொழிச்சிறுபான்மையினருக்கு அவர்களின் தாய்மொழியைக் கற்கவும் தாய்மொழியிலிருந்து உள்ளூர் மொழிக்கு மாறவும் சிறப்பு வகுப்புகள் நடத்துகின்றன. மேல்நிலைக் கல்வியை மலையாளத்தில் கற்பிக்கவும் பாடப்புத்தகங்கள் வெளியிடவும் கேரள அரசை ஆசிரியர்கள் வலியுறுத்த வேண்டும் என்றேன். சில வருடங்களுக்கு முன் கேரள அமைச்சர் மற்றும் பிரதிநிதிகள் அங்கு சென்று வந்ததையும் அந்நாட்டின் பிரதிநிதிகள் சில வாரங்களுக்கு முன்பு கேரளத்திற்கு வந்ததையும் அவர்களுக்கு நினைவுறுத்தினேன். கூடவே தமிழகத்தில் மேல்நிலைக் கல்வி மட்டுமல்ல, கல்லூரிக் கல்வியையும் தமிழில் கற்க இயலும் எனக் கூறினேன். கலை, அறிவியல் பாடங்கள் அரசுக் கல்லூரிகளில் தமிழ் வழியில் கற்பிக்கப்படுவதையும் அத்தகைய வகுப்பில் இருந்துதான் வந்திருக்கிறேன் என்பதையும் ஆங்கிலத்தில் சொன்னேன். தமிழ் வழிக்கல்வி என்னுடைய ஆங்கிலத்தை பாதிக்கவில்லை, மாறாக உதவியிருக்கிறதென்றேன். கூடவே தற்போது மத்திய அரசு மருத்துவ படிப்புகளுக்கான புத்தகங்களை இந்தியில் வெளியிட்டு இருப்பதையும் சுட்டி என் வாதங்களுக்கு வலுவைக் கூட்டினேன். தாய்மொழிக் கல்வியை நீங்கள் பிற்போக்குத்தனமாகப் பார்ப்பீர்கள், ஆனால் தாய்மொழியில் கற்க விரும்புவர்களுக்கான வாய்ப்பை நாம் உருவாக்கித்தர வேண்டுமில்லையா? எனக் கேட்டேன்.

கேரளக் கல்லூரி மாணவர், அனைவருக்கும் மருத்துவம் மற்றும் பொறியலில் ஆர்வம் இல்லை என்கிறபோது, மதிப்பெண்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே அளவு முக்கியத்துவம் விளையாட்டு, இன்ன பிறவற்றிற்கும் வழங்கப்பட வேண்டும், விளையாட்டுப் பிரிவேளையைக்கூட அபகரிப்பது எந்த வகையில் நியாயம் எனக் கேட்டார். அதை ஆமோதித்து, எழுத்தாளர் பெருமாள்முருகன் கட்டுரையில் இருந்த கருத்தொன்றைச் சுட்டினேன்: வகுப்பறைகளில் விளையாடும் கைக்கிரிக்கெட், புத்தகக் கிரிக்கெட் விளையாட்டுகளைப்பற்றிச் சொல்லி, நீங்கள் விளையாட்டு பாடவேளையை அபகரித்து அவர்களை வகுப்பறையில் அடைக்கையில் அவர்கள் புதிய விளையாட்டுகளை உருவாக்கி இருந்த இடத்திலேயே விளையாடத் துவங்குவார்கள். இது அவர்களின் கற்பனையை விரித்தெடுக்கலாம், ஆனால் உடல் நலத்திற்கு நன்மை பயப்பதல்ல என்றேன்.

கல்லூரி மாணவி ஒருவர் தான் நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி எடுத்துக் கொண்டதாகவும் ஆனால் தரவரிசையில் இரண்டு லட்சத்திற்குப் பிறகான இடமெனவும் சொன்னார். கூடவே ஆசிரியர்கள் வகுப்பறையிலேயே போட்டித் தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சியை வழங்க வேண்டுமெனக் கேட்டார். ஆசிரியர்களின் பிரதிநிதி, மாணவர்களுக்குத் தெளிவாகப் புரியும்படி படம் நடத்துவதுதான் தங்கள் முதன்மைப் பணியெனவும், மற்ற அலுவல் பணிகளும் இருப்பதால் அதற்கு வாய்ப்பில்லை எனவும் மறுத்தார்.

"நீங்களெல்லாம் அரசு பள்ளி ஆசிரியர்கள், பெரும்பாலும் முதல் தலைமுறை மாணவர்கள் படிக்க வரும் இடம். தனியார் கல்லூரி மாணவர்களை விட அவர்களுக்கு வசதியும் வாய்ப்பும் குறைவு. கற்பித்தலை தாண்டி அரசின் கொள்கை வகுத்தலில் நம் மாணவர்களுக்கு நீதி வழங்கும் வகையில் நீங்கள் பங்களிக்க வேண்டும். பெருந்தொற்று காலத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு கைப்பேசி வாங்க இயலாத அரசு பள்ளி மாணவர்களைத் தமிழகத்திலும் கேரளத்திலும் கண்டோம். கைப்பேசி இருந்தும் சிக்னல் கிடைக்காததால் வீட்டுக் கூரைகளில் அமர்ந்து பாடம் கற்றோர், சிக்னலுக்காக பல கிலோமீட்டர் நடந்த மலைவாழ் மக்கள் உள்ளிட்டோரைப் பார்த்தோம். வாய்ப்புகளில் சமநிலைத் தன்மை இல்லாத கல்விச் சூழலில், இவர்கள் எல்லோருக்கும் ஒரே தேர்வு என்பது எங்ஙனம் சரியாகும்?" எனக் கேட்டேன்.

ஓரிரு இடங்களில் அது போன்ற நிலை இருக்கலாம் ஆனால் கேரளத்தைப் பொருத்தவரை பெரும்பாலான மாணவர்களிடம் பேசியும் இணைய வசதியும் இருந்தது/இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டது என்றார் ஆசிரியர்களின் பிரதிநிதி. நான் இப்போது வேறு விதமாகக் கேள்வியைத் தொடுத்தேன்: இங்கு இருப்பவர்களின் வகுப்பறையில் இருந்து எத்தனை மாணவர்கள் நீட் தேர்வைக் கடந்து மருத்துவப் படிப்பிற்குச் சென்றார்கள் எனக் கேட்டேன். "எத்தனையோ பேர் உண்டு!" என்ன சத்தமான பதில் வந்தது, பலரும் தலையாட்டி ஆமோதித்தார்கள். நான் அடுத்த கேள்வியைக் கேட்டேன்: அவர்களில் தனிப்பயிற்சி மையங்களுக்குச் செல்லாமல் தேர்ந்தவர்கள் எத்தனைஅமைதி. சரி, கோச்சிங் சென்டர்கள் வசூலிக்கும் குறைந்த கட்டணம் என்று எதைச் சொல்வீர்கள்? மேடையில் இருந்த மாணவி ஒரு லட்சம் என்றார். நீங்கள், பிள்ளைகளே என அழைக்கும் அனைவரிடமும் லட்சங்கள் இருக்குமா? நீண்ட அமைதி. அரசு பள்ளி மாணவர்கள் அனைவரும் லட்சங்கள் செலவு செய்ய இயலாது, அதே நேரத்தில் தனியார் பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் நேரடியாக தனிப்பயிற்சி மையங்களுக்குச் செல்லும் வழிமுறைகள் இங்கே உண்டு. அவை உண்டு உறைவிடப் பயிற்சிப் பள்ளிகளாகி நெடுங்காலம் ஆயிற்று; பள்ளிகள் அவர்களுக்கு தேவையான வருகைப் பதிவை வழங்கும், அவர்கள் பள்ளிக்கு வராமல் இரண்டு வருடங்களுக்கு முழு நேரமும் நீட் தேர்வுக்குப் பயிற்சி எடுக்கலாம். இப்படி இருக்கையில் இதை எல்லோர்க்கும் சம வாய்ப்பு எனச் சொல்ல இயலுமா? உடன் தேர்வைப் பலமுறை எழுதி வெற்றிபெறும் மாணாக்கர்கள் அதிகம். அரசுப்பள்ளி மாணவர்களின் குடும்பச்சூழல் பல்லாண்டுப் பயிற்சிக்கும் காத்திருப்புக்கும் ஏற்றதா? பதில் இல்லை.

எனவே இது போன்ற நடைமுறைச் சிக்கல்களை நீங்கள் அரசிற்குக் கொண்டு செல்ல வேண்டும். தமிழகம் நுழைவுத் தேர்வுகளை இதற்காகத்தான் எதிர்க்கிறது, இயலாத பட்சத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவத்திலும் பொறியியலிலும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியிருக்கிறது. புதிய கல்விக் கொள்கையால் அடுத்தடுத்து நுழைவுத் தேர்வுகள் வரும், ஆசிரியர்கள் தொடர்ந்து இந்தக் கேள்வியைச் சந்திக்க நேரும். கடந்த பிப்ரவரி 16 அரசு/தனியார் கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானிய குழு அனுப்பிய சுற்றறிக்கையின்படி 2023-24 கல்வியாண்டில் பட்டப்படிப்புகளில் சேர மாணவர்கள் பல்கலைக்கழகப் பொது நுழைவுத் தேர்வில் (CUET - Common University Entrance Test) தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். எனவே இணையவழிக் கற்றல் பெருகும் காலத்தில் கற்பித்தல் மட்டுமல்ல, எதிர்வரும் தேர்வுகளுக்கு அவர்களைத் தயார் ஆக்குவதும், இத்தகைய அசமத்துவம் உள்ள ஒரு நாட்டில் போட்டித் தேர்வுகள் அவசியமானவயா எனக் கேள்விக்குள்ளாக்குவதும்தான் ஆசிரியர்களின் பணியாக இருக்க முடியும் எனச் சொன்னேன். ஒருவேளை நுழைவுத் தேர்வுகளால் பாதிப்பு இல்லை எனக் கருதினால் தமிழகத்தை போல, அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கையை இவை எங்ஙனம் பாதிக்கிறது என்பதைக் குறித்த ஒரு ஆய்வை மேற்கொள்ள அரசை வலியுறுத்த வேண்டும் எனவும் கூறினேன். மௌனமே பதில்.

பிறகு, கற்பித்தல் குறித்த மாணவர்களின் வழக்கமான குற்றச்சாட்டுகள். ஆசிரியர்கள் நெளியத்துவங்கினர், ஒருவர் எழுந்து "உங்களின் தற்போதைய நிலைமைக்குக் காரணம் உங்களை பயிற்றுவித்த ஆசிரியர்கள் அல்லவா? அவர்களைப் பற்றி பேசுங்கள், அவர்களின் பெயரைச் சொல்லுங்கள், அவர்கள் என்ன செய்தார்கள்?" என்றார். எங்களுடைய பள்ளி-கல்லூரி ஆசிரியர்கள் சிலர் எங்களுக்கு எங்ஙனம் வழிகாட்டியாக இருந்தார்கள் எனச் சொன்னேன். மொழித்திறனை வளர்க்க ஆங்கில நாளிதழ்களைப் படிக்க ஊக்குவித்தார்கள், நடுப்பக்கக் கட்டுரைகளைக் குறித்துப் பேசி அடுத்தநாள் படித்தோமா என்பதையும் உறுதி செய்து கொண்டார்கள். அவர்கள்வழி அறிந்த ஆங்கிலத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், மென்திறன் பயிற்சி வகுப்புகள் எங்களுக்குத் திறனை வளர்த்துக்கொள்ள எவ்வாறு உதவின எனப் பேசினேன். அடிப்படை சேமிப்பு, சமூக நலத்திட்டங்கள், உடல் நலம் குறித்த தகவல்களை எங்களுடன் எப்படிப் பகிர்ந்து கொண்டார்கள் என்பதையும் சொன்னேன். அவர்களில் சிலர் நாங்கள் உயர்கல்வி செல்கிறோமா இல்லையா என்பதைக் கண்காணித்தார்கள், தற்போதைய அரசு அதைக் கட்டாயமாக்கியிருக்கிறது எனவும் சொன்னேன். ஆசிரியர் பிரதிநிதி, இங்கே அதை அரசுத் துறையே செய்கிறது, எங்களின் பங்களிப்பு அவசியமில்லை என்றார்.

மொழி, நுழைவுத் தேர்வு உள்ளிட்ட விஷயங்களில் என்னுடைய கருத்துக்களின் மீது ஒரு ஒவ்வாமை இருந்ததை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஆனால், எங்களின் அனைவரின் கருத்துக்கும் உடனடி மறுப்பினை ஆசிரியர்களிடம் எதிர்வினையாகக் காண முடிந்தது. அவ்வப்போது விவாதம் திசைமாறுகிறது என்கிற கருத்தும் பிரதிநிதியிடமிருந்து வந்தது. குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் பிரதிநிதியால் மறுக்கப்பட்டு உடனடிப் பதில்கள் வழங்கப்பட்டு மேலும் சிந்திப்பதற்கான, விரித்தெடுப்பதற்கான கதவுகள் அடைக்கப்பட்டன. பிறகு, ஆசிரியரும் மாணவரும் விவாதிக்க நேரும்போது எப்போதும் ஆசிரியர்தானே சரியாக இருக்க முடியும்? அரங்கு எங்களுடையதென்றாலும் இப்படி ஒரு மறைமுக அதிகாரம் ஆசிரியர்களிடமிருந்து வெளிப்பட்டதைக் காண முடிந்தது.

இறுதியாக ஆசிரியர்களில் ஒருவர் நன்றியுரை வழங்கினார். அவர் தன் மகள் டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாறுப் படிப்பில் சேர்ந்து, பிற்காலத்தில் முனைவர் பட்டம் வாங்க விரும்பியதை நினைத்துக் கவலை கொண்டதையும், முனைவர் பட்டம் வாங்குகையில் அவர் எட்டியிருக்கும் வயதை நினைவுறுத்தி நல்வழிப்படுத்தி சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்த்திருப்பதையும் பெருமையுடன் பகிர்ந்து கொண்டார். அப்போதுதான் நான் எவர் முன்னே அமர்ந்திருக்கிறேன் எனப் பொறி தட்டியது. அப்பல்கலைக்கழகத்தில் நுழைய இவர் பிள்ளை நிச்சயம் நுழைவுத் தேர்வு எழுதி இருப்பார், அதற்கெனத் தனிப்பயிற்சிக்கூட எடுத்திருப்பார். என் முன்னே அமர்ந்திருப்பவர்களின் பிள்ளைகள் பெரும்பாலும் தனியார் பள்ளிகளில் படிப்பார்கள், நுழைவுத் தேர்வுகளுக்குப் பல லட்சங்களில் பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பார்கள். இவர்களிடம் இருந்து அரசுக்கு நுழைவுத் தேர்வுகளுக்கு எதிரான ஒரு கோரிக்கை எழுவதற்கு வாய்ப்புக் குறைவு. எல்லோரிடமும் போட்டிபோடுவதற்குப் பதில் பொருளாதார வலுவுள்ள உயர்குடிகள் தமக்குள் போட்டிபோட்டுக்கொள்வது ஆரோக்கியமானதுதான் இல்லையா?!

 

Friday, May 5, 2023

സ്കൂൾ വിദ്യാഭ്യാസം - ഒരു ചർച്ച

കഴിഞ്ഞ ഫെബ്രുവരിയിൽ ഹയർ സെക്കണ്ടറി സ്കൂൾ അധ്യാപകർക്കായി കേരള സ്കൂൾ വിദ്യാഭ്യാസ വകുപ്പ് സംഘടിപ്പിച്ച ഒരു സ്കിൽ ഡെവലപ്മെൻറ് പരിപാടിയിൽ പങ്കെടുക്കുകയുണ്ടായി. സംസ്ഥാന/കേന്ദ്ര/സ്വകാര്യ സ്കൂളുകളിൽ പഠിച്ച, കർണാടകം, ഒറീസ, കേരളം എന്നിവിടങ്ങളിൽ നിന്നുള്ള വിദ്യാർഥികളോടൊപ്പമായിരുന്നു ചർച്ച. ഞങ്ങളുടെ സ്കൂൾ അനുഭവങ്ങളെക്കുറിച്ചും അധ്യാപകർക്ക് കൂടുതൽ നന്നായി ചെയ്യാമായിരുന്നുവെന്ന് ഞങ്ങൾ കരുതുന്ന കാര്യങ്ങളെക്കുറിച്ചും സംസാരിക്കുക എന്നതായിരുന്നു സെഷന്റെ ലക്ഷ്യം.

PC: Samatha Mathew

അധ്യാപനത്തിനപ്പുറം തനതായ തമിഴ്നാട് വിദ്യാഭ്യാസത്തെപ്പറ്റി സംസാരിക്കുക എന്നതായിരുന്നു എൻ്റെ ഉദ്ദേശ്യം. മാതൃഭാഷാ വിദ്യാഭ്യാസം, പ്രവേശന പരീക്ഷകൾ, ദേശീയ വിദ്യാഭ്യാസ നയം, മത്സര പരീക്ഷകൾ എന്നിവയിൽ തമിഴ്നാടിന്റെ കാഴ്ചപ്പാട് മറ്റ് സംസ്ഥാനങ്ങളെ അപേക്ഷിച്ച് വ്യത്യസ്തമായതാണ്. സർക്കാർ സ്കൂൾ കുട്ടികൾക്ക് നീറ്റ് കോച്ചിംഗ്, കോളേജ് ടൂർ ഉൾപ്പെടെയുള്ള ചില പുതിയ പദ്ധതികൾ അടുത്തിടെയാണ് അവിടെ നടപ്പിലാക്കിയത്. അതും  അധ്യാപകരോട് പങ്കുവെക്കാം എന്ന് കരുതി.

"അധ്യാപകർ വിദ്യാർത്ഥികളും വിദ്യാർത്ഥികൾ അധ്യാപകരും ആകുന്ന പരിപാടി എനിക്ക് വിചിത്രമാണ്. എങ്ങനെ തുടങ്ങണമെന്ന് എനിക്കറിയില്ല. ബഹുമാനപ്പെട്ട വിദ്യാർത്ഥികളേ... ഞാൻ തമിഴ്നാട്ടിൽ നിന്നാണ്, സ്കൂൾ-കോളേജ് വിദ്യാഭ്യാസം സർക്കാർ സ്ഥാപനങ്ങളിൽനിന്ന് പൂർത്തിയാക്കി. തമിഴ്നാടിന്റെ വീക്ഷണകോണിൽ നിന്നുകൊണ്ട് എനിക്ക് എന്തെങ്കിലും പറയാൻ കഴിയുമെന്ന് കരുതുന്നു” ഞാൻ ആരംഭിച്ചു.

മീഡിയം ഓഫ് എഡ്യൂക്കേഷൻ ആയിരുന്നു ആദ്യ റൗണ്ടിലെ ചർച്ചാവിഷയം. പത്താം ക്ലാസ് വരെയുള്ള മാതൃഭാഷാ വിദ്യാഭ്യാസത്തിൽ നിന്നു ഇംഗ്ലീഷിലേക്ക് മാറുന്നതിൽ ബുദ്ധിമുട്ടുണ്ടെന്നും, ക്ളാസ് മുറികളെ പരീക്ഷണശാലകളാക്കി മാറ്റി സയൻസ് പഠിപ്പിക്കുന്നതാണ് മനസിലാക്കുവാൻ എളുപ്പമെന്നും കർണാടക സുഹൃത്ത് പറയുകയുണ്ടായി. യൂ.പി ഹൈസ്കൂൾ പാഠപുസ്തകങ്ങളിലുള്ള പരീക്ഷണങ്ങൾ ചെയ്തുനോക്കുവാൻ ഹയർ സെക്കൻഡറി ക്ളാസുവരെ  കാത്തിരിക്കുന്നത് വിഷമം ഉണ്ടാക്കുന്നുവെന്നും അദ്ദേഹം കൂട്ടിച്ചേർത്തു.

സ്കൂൾ ഭാഷാ നയത്തെ ഒരു കോളേജ് വിദ്യാർത്ഥി വിമർശിച്ചു സംസാരിക്കുകയുണ്ടായി. സ്വകാര്യ സ്കൂളിലാണ് പഠിച്ചതെന്നും അവിടെ സ്കൂൾ പരിസരത്ത് നിർബന്ധമായും ഇംഗ്ലീഷ് സംസാരിക്കണമെന്നും അത് ലംഘിക്കുന്നവർക്ക് പിഴയുണ്ടെന്നും അദ്ദേഹം പറഞ്ഞു. ഭാഷാ പഠനത്തിൽ ഇത്ര കണിശത ആവശ്യമില്ലെന്നും കേന്ദ്രീയ വിദ്യാലയങ്ങളിൽ മാതൃഭാഷാ വിദ്യാഭ്യാസത്തിന് അവസരമില്ലെന്നും അദ്ദേഹം സൂചിപ്പിച്ചു.

മാതൃഭാഷാ വിദ്യാഭ്യാസമാണ് മികച്ചത് എന്നത് തെളിയിക്കപ്പെട്ട വസ്തുതയാണ്.[1] വിദ്യാഭ്യാസപരമായി മുന്നിട്ടുനിൽക്കുന്ന വടക്കൻ യൂറോപ്യൻ രാജ്യങ്ങളിൽ മാതൃഭാഷാ വിദ്യാഭ്യാസമാണ് നടക്കുന്നത്. ഭാഷാന്യൂനപക്ഷങ്ങൾക്ക് അവരുടെ മാതൃഭാഷ പഠിക്കാനും മാതൃഭാഷയിൽ നിന്ന് പ്രാദേശികഭാഷയിലേക്ക് മാറാനും പ്രത്യേക ക്ലാസുകൾ ഉണ്ട്.[2] കഴിഞ്ഞ വർഷം കേരള മുഖ്യമന്ത്രിയും സംഘവും ഫിൻലാൻഡ് സന്ദർശിച്ചിരുന്നുവെന്നും അവരുടെ രാജ്യത്തിന്റെ പ്രതിനിധികൾ കേരളം സന്ദർശിച്ചിരുന്നുവെന്നും അവരെ ഓർമ്മിപ്പിച്ചു.[3,4] ഉന്നത വിദ്യാഭ്യാസം മലയാളത്തിലാക്കുവാനും പാഠപുസ്തകങ്ങൾ പ്രസിദ്ധീകരിക്കുവാനും അധ്യാപകർ കേരള സർക്കാരിനോട് ആവശ്യപ്പെടണമെന്ന് ഞാൻ പറഞ്ഞു. തമിഴ്നാട്ടിലാകട്ടെ, സർക്കാർകോളേജുകളിൽ ആർട്സ്, സയൻസ് വിഷയങ്ങൾ തമിഴ് മീഡിയത്തിലും പഠിക്കാൻ അവകാശമുണ്ട്. ഇപ്പോൾ, കേന്ദ്ര സർക്കാർ മെഡിക്കൽ കോഴ്സുകൾക്കുള്ള പുസ്തകങ്ങൾ ഹിന്ദിയിൽ പ്രസിദ്ധീകരിക്കുന്നുണ്ടെന്ന് ചൂണ്ടിക്കാട്ടിക്കൊണ്ട് എന്റെ വാദങ്ങൾക്ക് ശക്തി കൂട്ടി. ‘മാതൃഭാഷാവിദ്യാഭ്യാസത്തെ പിന്തിരിപ്പനായി നിങ്ങൾ കണ്ടേക്കാം, എന്നാൽ മാതൃഭാഷയിൽ പഠിക്കാൻ ആഗ്രഹിക്കുന്നവർക്ക് നാം അവസരമൊരുക്കേണ്ടതല്ലേ?’ ഞാൻ ചോദിച്ചു.

പ്രവേശന പരീക്ഷയ്ക്ക് താൻ പ്രാക്ടീസ് ചെയ്തിരുന്നെങ്കിലും രണ്ട് ലക്ഷത്തിന് പിന്നിലായിരുന്നുവെന്ന് ഒരു കോളേജ് വിദ്യാർത്ഥിനി പറഞ്ഞു. മത്സര പരീക്ഷകൾക്കും പ്രവേശന പരീക്ഷകൾക്കും ക്ലാസ് മുറിയിൽ പരിശീലനം നൽകാനും അദ്ദേഹം അധ്യാപകരോട് ആവശ്യപ്പെട്ടു. വിദ്യാർത്ഥികൾക്ക് മനസ്സിലാകുന്ന രീതിയിൽ പാഠം  നടത്തുകയാണ് തങ്ങളുടെ പ്രാഥമിക കർത്തവ്യമെന്നും മറ്റ് ഔദ്യോഗിക ചുമതലകൾ ഉള്ളതിനാൽ അതിന് അവസരമില്ലെന്നും അധ്യാപക പ്രതിനിധി പറയുകയുണ്ടായി.

“കോവിഡ് സമയത്ത്, നമ്മൾ തമിഴ്നാട്ടിലെയും കേരളത്തിലെയും സർക്കാർ സ്കൂൾവിദ്യാർഥികൾ ഓൺലൈൻ ക്ലാസുകൾക്കായി മൊബൈൽ ഫോൺ വാങ്ങാൻ കഴിയാതെ വലയുന്നത് കണ്ടു. മൊബൈൽ ഫോൺ സിഗ്നൽ ഇല്ലാത്തതിനാൽ വീടിനു മുകളിൽ ഇരിക്കുന്ന വിദ്യാർഥികളെയും സിഗ്നലിനായി കിലോമീറ്ററുകളോളം നടന്ന മലയോര നിവാസികളെയും നമ്മൾ കണ്ടിട്ടുണ്ട്. അവസരങ്ങളുടെ സന്തുലിതാവസ്ഥയില്ലാത്ത ഒരു വിദ്യാഭ്യാസ അന്തരീക്ഷത്തിൽ, എല്ലാവർക്കും ഒരേ തിരഞ്ഞെടുപ്പ് എന്നത് എങ്ങനെ ശരിയാകും?” ഞാൻ ചോദിച്ചു. ഒന്നുരണ്ടു സ്ഥലങ്ങളിൽ അങ്ങനെയൊരു സാഹചര്യമുണ്ടാകാമെന്നും എന്നാൽ കേരളത്തെ സംബന്ധിച്ചിടത്തോളം ഭൂരിഭാഗം വിദ്യാർത്ഥികൾക്കും ഇന്റർനെറ്റ് ആക്സസ് ഉണ്ടെന്നും അധ്യാപക പ്രതിനിധി പറഞ്ഞു.

ഞാൻ ഉദ്ദേശിച്ച സാമ്പത്തിക അസമത്വത്തെ[5] മറ്റൊരു രീതിയിൽ ഉയർത്തി. “നിങ്ങളുടെ ക്ലാസ് മുറികളിൽ നിന്ന് എത്ര വിദ്യാർത്ഥികൾ നീറ്റ് പാസായി മെഡിക്കൽ പഠനത്തിന് പോയി” ഞാൻ ചോദിച്ചു. "ഒരുപാട് ഉണ്ട്!" ഉച്ചത്തിലുള്ള പ്രതികരണം വന്നു, പലരും തലയാട്ടി. അടുത്ത ചോദ്യം: എത്ര പേർ സ്വകാര്യ പരിശീലന കേന്ദ്രങ്ങളിൽ പോകാതെ തിരഞ്ഞെടുക്കപ്പെട്ടു? കോച്ചിംഗ് സെന്ററുകൾ ഈടാക്കുന്ന ഏറ്റവും കുറഞ്ഞ ഫീസ് എത്രയാണ്? വേദിയിലിരുന്ന വിദ്യാർത്ഥി ഒരു ലക്ഷം എന്ന് മറുപടി പറഞ്ഞു. നിങ്ങൾ കുട്ടികൾ എന്ന് വിളിക്കുന്നവർക്കെല്ലാം ലക്ഷങ്ങൾ ഉണ്ടോ? ഒരു നീണ്ട നിശബ്ദത. എല്ലാ സ്കൂൾ വിദ്യാർത്ഥികൾക്കും ലക്ഷങ്ങൾ മുടക്കാൻ കഴിയില്ല, അങ്ങനെയാണെങ്കിൽ എല്ലാവർക്കും തുല്യ അവസരം എന്ന് വിളിക്കാമോ? കൂടാതെ ഒന്നിലധികം തവണ പരീക്ഷ എഴുതി വിജയിക്കുന്ന നിരവധി വിദ്യാർത്ഥികളുണ്ട്.[6] എല്ലാ സ്കൂൾ വിദ്യാർത്ഥികളുടെയും കുടുംബാന്തരീക്ഷം, വർഷങ്ങളുടെ പരിശീലനത്തിനും കാത്തിരിപ്പിനും അനുയോജ്യമാണോ? ഉത്തരമില്ല.

യൂണിവേഴ്സിറ്റി ഗ്രാന്റ്സ് കമ്മീഷൻ കഴിഞ്ഞ ഫെബ്രുവരി 16ന് സർക്കാർ/സ്വകാര്യ വിദ്യാഭ്യാസ സ്ഥാപനങ്ങൾക്ക് അയച്ച സർക്കുലർ അനുസരിച്ച്,[7] അധ്യയന വർഷത്തിൽ ബിരുദ പ്രോഗ്രാമുകളിൽ ചേരുന്നതിന് വിദ്യാർത്ഥികൾ കോമൺ യൂണിവേഴ്സിറ്റി എൻട്രൻസ് ടെസ്റ്റ് (സിയുഇടി - കോമൺ യൂണിവേഴ്സിറ്റി എൻട്രൻസ് ടെസ്റ്റ്) പാസാകേണ്ടത് അനിവാര്യമാണ്. അതിനാൽ ഇ-ലേണിംഗ് വ്യാപനത്തിന്റെ കാലഘട്ടത്തിൽ അധ്യാപകരുടെ ചുമതല കേവലം പഠിപ്പിക്കുക മാത്രമല്ല, വരാനിരിക്കുന്ന പരീക്ഷകൾക്ക് അവരെ സജ്ജരാക്കുക എന്നതുകൂടിയാണ്. ഇത്രയും അസമത്വമുള്ള ഒരു രാജ്യത്ത് മത്സരപരീക്ഷകൾ ആവശ്യമാണോ എന്ന് അദ്ധ്യാപകരാണ് ചോദ്യം ചെയ്യേണ്ടത്.

ഇക്കാരണത്താൽ തമിഴ്നാട് സർക്കാർ പ്രവേശന പരീക്ഷയെ എതിർക്കുന്നു, സർക്കാർ സ്കൂളുകളിൽ വിദ്യാഭ്യാസം പൂർത്തിയാക്കുന്ന വിദ്യാര്ഥികൾക്ക് മെഡിസിൻ ഉൾപ്പെടെയുള്ള പ്രൊഫഷണൽ കോഴ്സുകൾക്കു 7.5 ശതമാനം സംവരണം നൽകിയിട്ടുണ്ട്.[8,9] സ്കൂൾ വിദ്യാർത്ഥികളുടെ ഉന്നത വിദ്യാഭ്യാസ പ്രവേശനത്തെ മത്സര പരീക്ഷകൾ എങ്ങനെ ബാധിക്കുമെന്ന് പഠനം നടത്താൻ അദ്ധ്യാപകർ സർക്കാറിനെ നിർബന്ധിക്കണമെന്നും ഇത്തരം വിഷയങ്ങൾ സർക്കാരിൽ എത്തിക്കണമെന്നും തീരുമാനങ്ങളിൽ ഇടപെടണമെന്നും ആവശ്യപ്പെട്ടു.

കോളേജ് വിദ്യാഭ്യാസത്തിലും കോളേജ് അധ്യാപകരുടെ തിരഞ്ഞെടുപ്പിലും കേരളത്തിൽനിന്നും പാഠമുൾക്കൊണ്ട് തമിഴ്നാട് ചില മാറ്റങ്ങൾ വരുത്തിയിട്ടുണ്ട്. ഇത്തരത്തിൽ സ്കൂൾ വിദ്യാഭ്യാസത്തെക്കുറിച്ച് കേരളത്തിനും ചിന്തിക്കാനാകും. സി.ബി.എസ്.ഇ പാഠപുസ്തകങ്ങളിൽ നിന്ന് ചില ഭാഗങ്ങൾ കേന്ദ്രസർക്കാർ ഒഴിവാക്കിയത് അംഗീകരിക്കണോ വേണ്ടയോ എന്ന് കേരള സർക്കാർ ആലോചിക്കുന്നത് ദിവസങ്ങൾക്ക് മുമ്പ് നമ്മൾ കണ്ടു.[10] 2016ൽ നങ്ങേലിയുടെ കഥ സിബിഎസ്ഇ പാഠപുസ്തകങ്ങളിൽ നിന്ന് നീക്കം ചെയ്തതായി നമുക്കറിയാം.[11] ഒരു ബഹു-സാംസ്കാരിക രാജ്യത്ത്, രാഷ്ട്രീയ/പാഠ്യപദ്ധതി കാരണങ്ങളാൽ കേന്ദ്രസർക്കാർ പാഠപുസ്തകങ്ങളിൽ പ്രാദേശിക ചരിത്രത്തിന് സ്ഥാനമില്ലെങ്കിൽ, തമിഴ് നാടിനെപ്പോലെ പന്ത്രണ്ടാം ക്ലാസ് വരെയുള്ള സിലബസ് തയ്യാറാക്കാനും മലയാളവും ഇംഗ്ലീഷും ഉൾപ്പെടെയുള്ള ഭാഷകളിൽ പാഠപുസ്തകങ്ങൾ അച്ചടിക്കാനും നിർദ്ദേശിക്കുന്ന ഒരു കമ്മീഷനെക്കുറിച്ചു കേരളത്തിനു ചിന്തിച്ചുകൂടെ? 

സാക്ഷരതയിലും വിദ്യാഭ്യാസത്തിലും മുൻപിൽ നിൽക്കുന്ന ഒരു സംസ്ഥാനത്തിന് സ്വന്തം വിദ്യാർത്ഥികൾക്കായി ഗുണമേന്മയുള്ള, പ്രാദേശിക അറിവുകളാൽ സമ്പന്നമായ, മാതൃഭാഷക്ക് മുൻതൂക്കം നൽകുന്ന, മത്സര പരീക്ഷകൾ നേരിടാൻ വിദ്യാർത്ഥികളെ സജ്ജമാക്കുന്ന ഒരു പാഠ്യപദ്ധതി മുൻപോട്ടു വയ്ക്കുവാൻ കഴിയുമെന്ന് തോന്നുന്നു. പുറമേ സാമൂഹിക സാമ്പത്തിക കാരണങ്ങളാൽ[12] നിരാലംബരായ കുട്ടികളുടെ അവസരങ്ങളിലെ അസമത്വം പരിഹരിക്കുന്നതും.



References:

1. Why mother language-based education is essential https://www.unesco.org/en/articles/why-mother-language-based-education-essential#:~:text=Research%20shows%20that%20education%20in,learning%20outcomes%20and%20academic%20performance

2. சுவீடன் அரசுப் பள்ளியில் தமிழ் மொழிக் கல்வி https://www.arunchol.com/vijay-ashokan-on-sweden-government-school

3. CM Pinarayi Vijayan to visit Finland to study education model. https://english.mathrubhumi.com/news/kerala/kerala-cm-pinarayi-vijayan-to-visit-finland-to-study-education-model-1.7869428

4. Finland to work with Kerala in education sector https://www.thehindu.com/news/national/kerala/finland-to-work-with-kerala-in-education-sector/article65972971.ece 

5. People earning Rs 25,000 per month fall in top 10% of wage earners in India: Report  https://timesofindia.indiatimes.com/business/india-business/people-earning-rs-25000-per-month-fall-in-top-10-of-wage-earners-in-india-report/articleshow/91694940.cms

6. A whole new year for NEET https://www.thehindu.com/news/national/tamil-nadu/a-whole-new-year-for-neet/article38387264.ece

7. CUET UG 2023: UGC urges all Universities, HEIs to adopt CUET score for admissions https://timesofindia.indiatimes.com/education/news/cuet-ug-2023-ugc-urges-all-universities-heis-to-adopt-cuet-score-for-admissions/articleshow/98019706.cms

8. TN to give 7.5% quota for State govt. school students in professional courses https://www.thehindu.com/news/national/tamil-nadu/tn-to-give-75-quota-for-state-govt-school-students-in-professional-courses/article36114570.ece

9. Tamil Nadu: Understanding The Impact Of The 7.5% Reservation For Govt School Students In NEET https://thewire.in/education/tamil-nadu-impact-7-5-reservation-government-school-students-neet  

10. SCERT in a bind over changes in NCERT textbooks https://www.thehindu.com/news/national/kerala/scert-in-a-bind-over-changes-in-ncert-textbook/article66707439.ece

11. The CBSE Just Removed an Entire History of Women’s Caste Struggle https://thewire.in/education/cbse-removed-history-womens-caste-struggle

12. Not all inequalities are alike https://www.nature.com/articles/d41586-022-01682-3#:~:text=Inequality%20of%20opportunity%20is%20the%20conduit%20through%20which%20inequality%20is,and%20countries%20around%20the%20world


വിവർത്തനം: Google translate, വിഷ്ണു എസ് ഓമനക്കുട്ടൻ, ശ്രുതി എസ്


Wednesday, May 3, 2023

கவிதை உன்னைச் சும்மா விடாது

விஷ்ணுபுரம்-குமரகுருபரன் விருதுச் செய்தியை வாசித்தபோது ஆய்வகத்தில் இருந்தேன். அறைக்குச் சென்று சில கவிதைகளை மேற்கோள் காட்டி இதை எழுதலாம் என எண்ணியிருந்தேன்; தொகுப்பு வீட்டில். இன்று திரும்பிப் பார்க்கும்போது கவிஞரின் முதல் தொகுப்பு நிறைய அதிர்ச்சிக் கவிதைகளுடன் வந்திருந்தது நினைவிலிருக்கிறது. கூடவே, திருப்பூரைப் பற்றிய கவிதைகள் மனதிற்கு அணுக்கமானவையாக இருந்தன. மொழியில் நல்ல ஓட்டம். அம்மா என்றாலும் பெண்தானே, பிள்ளை என்றாலும் ஆண்தானே எனும் பொருள்படும் கவிதை குறித்த நினைவுகள் இன்னும் நீங்கவில்லை.


இங்கிருந்து https://www.jeyamohan.in/182138/


ஒருமுறை முகப்புத்தகத்தில் நேரலையாக கையில் சிகரெட்டுடன் - (விருது அறிவிப்புப் புகைப்படத்திலும் பேனா அதே லாவகத்துடன் விரலிடுக்கில் அமர்ந்திருப்பதைக் காணலாம்) பிற கவிஞரின் கவிதைகளை வாசித்துக் கொண்டிருந்தார். "யார்ரா இவன் ஒரே நேரத்தில் ரெண்டு போதையை போடுறான்! நம்ம சொந்தத்துல இவன் ஒரு டைப்பா இருக்கானே?!" என நினைத்துக் கொண்டேன். பிறகு தமிழ் விக்கியிலோ அல்லது அவர் எழுதிய பெருந்தேவியின் கவிதை ரசனைக் குறிப்பிலோ அவர் உயிர்மை பதிப்பகத்தில் இருக்கிறார் என அறிந்து கொண்டேன். பனியன் கம்பெனியில் இருந்து ஒருவர் பத்திரிகைத் துறைக்குப் பாய்வது, அதுவும் கவிதையால் நிகழ்ந்தது என்பது மகிழ்ச்சியாக இருந்தது; இப்போது விஷ்ணுபுரம்-குமரகுருபரன் விருது. அவர் முன் அன்போடு கைநீட்டிச் சொல்கிறேன்: கவிதை உன்னைச் சும்மா விடாது சதீஷ். இன்னும் வெகுதூரம் அழைத்துச் செல்லும்.

அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கே. என். பி. சுப்பிரமணியன் நகர்
திருப்பூர் 641608
------------------------------------
கே. என். பி. சுப்பிரமணியன் நகரில்தான்
பத்து வருடமாக என் உடல் சுற்றிக்கொண்டிருக்கிறது
என் மூதாதையர்கள் போர்கள் இல்லாமலே
அகதிகளானவர்கள்
தற்செயலாகவோ
வரலாறாகவோ
எப்போதும் ஒரு வறுமை
என் நினைவின் நாளிலிருந்து எரிகிறது
நூறு தெருக்கள் உள்ள இந்த நகரில்
இந்தப் பத்தாவது வருடத்தில் ஏழாவதாக மாறிய மூன்றாவது மாடி வீட்டில் வசிக்கிறோம்
கே. என். பி. சுப்பிரமணியன் நகரில்
மரங்களே இல்லை
இந்த நகரத்திலும்
மரங்களே இல்லை
மஞ்சள் அரளி மரங்கள் மட்டுமே உண்டு
அவைகளில் பெரிதாக நிழல்கள் இல்லை
ஆனால் எல்லா மாலையிலும்
இந்த திருப்பூரில்
தான் மட்டும்தான்
ஒரே அழகனெ
ஒரே மலரென பொலிவு காட்டும்
கே என் பி சுப்ரமணியன் தெருவில்
பத்தாண்டுகளாக சுற்றிக் கொண்டிருக்கும்
என்னுடலில்
இதுவரை
போயும் போயும் இந்த மஞ்சள் அரளியில்
ஒரு அரளி கூட கனவாக வந்ததில்லை
செத்த பிறகு பேயாகத் தலைகீழாகத் தொங்க அத்தனை வலுவான கிளைகளும் இல்லை இந்த மலர் மரத்தில்
எத்தனை பத்து வருடங்களாக அத்தனை உடல்கள் இப்படி அலையணுமோ.

Tuesday, May 2, 2023

கடைக்கண் அளாவிய

பாட்டுதான் அவர்களைச் சேர்த்தது  

பாடிப்பாடி மேடை வரை வந்தாயிற்று 

மேடையில் நிகழ்கிறதொரு டூயட்

தனிப்பாட்டில் மலராப் பூக்கள் 

மேடையில் ஒளிரத் துவங்க  

குரல்கள் கலக்கும் உச்சப் புள்ளியில் 

தலைவி நோக்கத் தலைவனும் நோக்க 

பாட்டிடை விழியால் காதலைத் தொட்டனர் 

பாட்டுடை மொழியில் சிநேகங் கலந்தனர் 

பார்ப்பவர் எமக்கும் சேர்த்து ஊட்டினர்.